கேரளாவில் தெரு நாய்கள் குழந்தைகளை துரத்தி கடிக்கும் சம்பவங்கள் சமீப நாட்களாக இடம்பெறுவது அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை முன்வைத்து வருகிறனர்.
இதற்கிடையே தெரு நாய்களுக்கு உணவளிக்கும் நபர்கள்தான், அந்த நாய்கள் யாரையாவது கடித்தால் அதற்கு பொறுப்பேற்க வேண்டும். மேலும், அவர்களுக்கான மருத்துவச் செலவுகளையும், பராமரிப்புச் செலவுகளையும் ஏற்கவேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் கேரளாவில் பச்சிளம் குழந்தையை தெருநாய்கள் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திரூரிலுள்ள விவசாய நிலம் ஒன்றில் பச்சிளம் குழந்தையின் உடலை, தெருநாய்கள் கடித்து குதறிக்கொண்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதிமக்கள், நாய்களை விரட்டியடித்தனர். தொடர்ந்து இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், குழந்தையை வீசி சென்றது யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.