மருத்துவ கல்வியில் மாற்றம் குறித்து உச்சநீதிமன்றம் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கருத்தைக் கூறுவார்கள் அதனைத் தீர்ப்பாகப் பார்க்க முடியாது நீட்தேர்வு வழக்கின் தீர்ப்பு வரும்போது பார்ப்போம் என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாநகர் நேதாஜி சாலை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போது
பிரதமர் மோடியின் திட்டத்தில் பயன்பெற்ற ஒரு கோடி பயனாளிகளுடன் தம்படம் என்ற நிகழ்ச்சியை மதுரையில் தொடங்கிவைத்துள்ளேன் .மத்திய அரசின் அதிகளவிற்குப் பெண் பயனாளிகள் தான் பயன்பெற்றுள்ளனர். கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களும் பயனாளிகள் தான் பெண்கள் தலைமையிலான முன்னேற்றம் அடிப்படையில் பெண்களை மையப்படுத்தி ஆட்சியை நடத்திவருகிறார்.
பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளோம்.மோடி ஆட்சியில் பெண்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவு என்பது திமுக மக்களுக்குத் திட்டங்கள் செய்துள்ளதால் ஓட்டுப் போடுவார்கள் என்றால் எதற்கான வாக்காளர்களுக்கு பரிசுப்பொருட்களை வழங்கி மக்களை அடைத்துவைக்கின்றனர். மக்களைச் சுற்றுலா அழைத்து செல்வது போன்ற புதிய யுக்தியைக் கையாண்டுவருகின்றனர்.
திமுக அரசின் மீது மக்களின் அதிருப்தி கடுமையாக உள்ளது அதனை சரி கெட்டுபார்க்கிறது ஆனால் அது நடக்காது தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் வெற்றிபெறும்.பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் போன்ற சம்பவங்களில் தமிழக அரசு தாமதம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விழுப்புரம் சிறுமி கூட்டுப் பாலியல் சம்பவத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது பெண்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கும். மருத்துவ கல்வியில் மாற்றம் குறித்து உச்சநீதிமன்றம் கூறிய கருத்து தீர்ப்பாக மாறாது , உச்சநீதிமன்றம் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கருத்தை கூறுவார்கள் நீட் தேர்வு தீர்ப்பு வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்றார்.