விரிவுரையாளர்களின் கோரிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசு பரிசீலிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் Mutharasan வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது..
“அரசு கலைக் கல்லூரிகளில் பணியாற்றி வரும் விரிவுரையாளர்கள் கோரிக்கைகள் குறித்து அரசு பரிசீலித்து நிறைவேற்றிதர வேண்டுகிறோம். கடந்த 15 ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகிறார்கள்.
இதையும் படிங்க : DMK கூட்டணிக்குள் புகைச்சல்? BUDGET எதிர்ப்பு போராட்டத்தில் கிடைத்த CLUE !
ஊதியம் ரூ.50,000/- வரை உயர்த்துதல், உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்து போராடி வருகின்றார்கள்.
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் விரிவுரையாளர்கள் இனி வேறு பணிகளுக்கு செல்ல வாய்ப்பு இல்லாத நிலையில் அவர்களுக்கு பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்றிட வேண்டுகிறோம்.” என தெரிவித்துள்ளார் Mutharasan.