தமிழகத்தில் கள்ளக்குறிச்சி, நீலகிரி, தேனி உட்பட 18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகி உள்ளது. வரும் 8ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், 9ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, தேனி உட்பட 18 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி, கரூர், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.