ITamilTv

தனுஷை கிழித்தெடுத்த பிரபலம்.. உனக்கெல்லாம் எதுக்கு இத்தனை பெண்களோட சகவாசம்?

K. Rajan insulted Dhanush

Spread the love

K. Rajan insulted Dhanush : நடிகர் தனுஷும் ஐஸ்வர்யாவும் போலி வாழ்க்கை வாழ்ந்து வந்து கொண்டிருப்பதாகவும், அவர்கள் இருவரும் தங்களுடைய பிள்ளைகள் நலனுக்காக மீண்டும் இணைய வேண்டும் எனவும் பிரபல தயாரிப்பாளரான கே ராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும் நடிகர் தனுஷும் கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இந்த ஜோடிக்கு லிங்கா, யாத்ரா என இரண்டு ஆண் மகன்கள் உள்ளனர். இவர்களது திருமண வாழ்க்கை சுமார் 18 ஆண்டுகளாக சிறப்பாக சென்று கொண்டிருந்த நிலையில்,

திடீரென இவர்களது உறவில் விரிசல் ஏற்பட்டதால் கடந்த 2022 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து பிரிய உள்ளதாக தனுஷ் ஐஸ்வர்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க : April 24 Gold Rate : மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை!

இந்த அறிவிப்பு தனுஷ் ஐஸ்வர்யா குடும்பத்தினரை மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தமிழ் திரை உலகினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அதன் பின்னர், அவர்கள் இருவரையும் சேர்த்து வைக்கும் எண்ணத்தில் இரு வீட்டார்களும் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால் குடும்பத்தாரின் முயற்சி தோல்வியில் முடிந்ததால் தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்துக்காக நீதிமன்றத்தை நாடி இருக்கிறார்கள். .

விவாகரத்து அறிவிப்புக்கு பின்னரும் தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் தங்களது மகன்களின் பள்ளி விழாக்களிலும், அவர்களது படங்கள் ரிலீஸ் ஆகும் பொழுது ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதுமாக இருந்து வந்தனர்.

K. Rajan insulted Dhanush

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ள தயாரிப்பாளர் கே ராஜன் தனுஷ் ஐஸ்வர்யா உடைய வாழ்க்கை போலி வாழ்க்கை என சாடி இருக்கிறார்.

சினிமாவில் நடிப்பதை போல நிஜ வாழ்க்கையிலும் நடித்துக் கொண்டிருக்கும் ஒரே தம்பதி தனுஷ் ஐஸ்வர்யா ஜோடி என வெளிப்படையாக போட்டு உடைத்திருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் அது ஒரு குடும்பமா? தனுஷ் எல்லாம் ஒரு மனுஷனா? ஐஸ்வர்யா ஒரு பொம்பளையா? எனவும், இப்படி கேடுகெட்ட தனமாக நடந்து அவர்களது இரண்டு மகன்களையும் அனாதையாக விட்டு விட்டார்களே.. என பலர் பேசும்படி அளவுக்கு இப்படி வாழலாமா?

அவர்களது மகன்களுக்காக இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள் எனக் கூறியுள்ளார்.

அது மட்டும் அல்லாமல் தனுஷ் உனக்கு எதுக்கு பல பெண்களோட வாழ்க்கை? ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழ் பண்பாட்டின்படி வாழ தெரியாதா?

நான் நேரடியாக எதுவும் சொல்லக்கூடாது என நினைத்தேன். என் மனது கேட்கவில்லை. கோர்ட்டு வரைக்கும் போன பிறகு உங்களை என்ன நாகரீகமா பேசுறது..

தமிழ் பண்பாட்டை முதலில் காப்பாற்ற வேண்டும் என நினைத்தால் தயவு செய்து நீங்கள் இருவரும் சேர்ந்து வாழுங்கள் என அந்த பேட்டியில் வெளிப்படையாக அனைத்தையும் போட்டு உடைத்திருக்கிறார் கே ராஜன் K. Rajan insulted Dhanush.

இதையும் படிங்க : விவிபேட் – கேள்விகள் இருப்பதாக உச்சநீதிமன்றம் கருத்து


Spread the love
Exit mobile version