தமிழ் சினிமாவில் இருக்கும் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவின் செல்லப்பிள்ளையாக இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு குடும்ப நாயகன் , நம்ப வீட்டு பிள்ளை என ரசிகர்கள் அன்போடு அழைத்து வருகின்றனர் . தளபதி விஜய்க்கு பிறகு குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த நாயகனாக இருக்கும் இவரது படங்களில் ஆபாச காட்சிகள் ,மது அருந்துதல் , புகைபிடித்தல் உள்ளிட்ட காட்சிகள் இடம்பெறாது . இதன் காரணமாகவே இவரது படங்களை காண குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் வருகிறார்கள் .
படத்துக்கு படம் இவர் எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் ரசிகர்களுக்கு பிடித்துப்போக அந்த படங்களும் திரையரங்குகளில் சக்கை போடு போடுகிறது . அந்தவகையில் மடோன் அஸ்வின் இயக்கத்தில், சிவகார்த்திகேயனின் மாறுபட்ட நடிப்பில் உருவாக்கியுள்ள மாவீரன் படத்தை சாந்தி டாக்கிஸ் நிறுவனம் பல கோடி ருபாய் செலவில் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.
இந்த படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை அதிதி ஷங்கர் நடிக்க சுனில், யோகி பாபு, சரிதா, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஏற்கனவே, முடிந்துவிட்ட நிலையில் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு மாவீரன் படத்தின் புதிய அப்டேட் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது .மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், உருவாக்கி உள்ள மாவீரன் திரைப்படம் ஜூலை 14ஆம் தேதி திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.