உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அடிக்கடி நடுத்தர வர்க்க உணவகங்களின் (hotel) மீது சுற்றுச்சூழலை சுகாதாரமாக வைத்திருக்கவில்லை என்ற பெயரில் சோதனை நடத்தி வருவது வழக்கம்.
அந்த வகையில், இதே போன்று பெரிய பெரிய ரெஸ்டாரண்ட்களிலும் இந்த செயலை அமல்படுத்த வேண்டும் என்றும் மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தான், ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் மெக்டோனல்ஸ் என்ற உணவகத்தின் (hotel) கழிவறையில் இருந்து வந்த எலி ஒன்று சாப்பிடும் இடத்திற்கு அருகே வந்து, வாடிக்கையாளர்களை தலைதெறிக்க ஓட செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
அதன்படி, ஹைதராபாத் ஹோட்டலில் 8 வயது சிறுவனை உணவகத்தில் இருந்து வந்த எலி கடித்ததை அடுத்து அந்த நிறுவனம் மீது சிறுவனின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
முன்னதாக, கடந்த மார்ச் 8ஆம் தேதியன்று 8 வயது சிறுவன் தனது பெற்றோருடன் மெக்டோனல்ஸ் உணவகத்திற்கு சாப்பிட சென்றுள்ளார். அப்போதுதான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.
அப்போது, கழிவறையில் இருந்து வந்த எலி ஒன்று அங்கிருந்தவர்களை தலைதெறிக்க ஓட செய்ததோடு சிறுவனின் ஆடைக்குள் நுழைந்து அச்சிறுவனின் தொடையில் கடித்துள்ளது.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் ரேபிஸ் மற்றும் டெட்டனஸ் தடுப்பூசி போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
RODENT ATTACK ON A CHILD in the McDonald’s restaurent Ground Floor, SPG Hotel, Kompally, Hyderabad, Telangana 500096.@McDonalds @mcdonaldsindia @consumercourtin @PiyushGoyalOffc @director_food @AFCGHMC @fooddeptgoi @TOIIndiaNews @TOIHyderabad @ABPNews @ndtv @ChildWelfareGov pic.twitter.com/wrjeQgAiBh
— Savio H (@SHenrixs) March 10, 2023
இதன் பின்னர், அடுத்த நாளான மார்ச் 9ஆம் தேதியன்று அந்த உணவகத்தின் மீது சிறுவனின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அதன்படி, சிறுவனின் இடது காலில் இரண்டு காயங்கள் இருப்பதாக கூறிய குடும்பத்தினர் அந்த உணவகத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அடுத்த மூன்று நாட்களில் சிறுவனுக்கு மேலும் இரண்டு ராபிஸ் தடுப்பூசிகள் போட வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாக கூறி உள்ளனர். மேலும், தங்களின் இந்த நிலைக்கு காரணமான அந்த உணவகத்தின் ஊழியர்கள் மீது கவனக்குறைவாக இருந்ததற்கான நடவடிக்கை எடுக்கும் படியும் சிறுவனின் தந்தை புகாரில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாக காவல்துறையினரும் முதல் கட்ட தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.