தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், கயத்தார், கோவில்பட்டி, புதூர் மற்றும் விளாத்திகுளம் ஒன்றியங்களைச் சார்ந்த 363 குடியிருப்புகள் பயனடையும் வகையில், ரூ.515.72 கோடி மதிப்பீட்டில் அமையவிருக்கும் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளுக்கு இன்று (23/05/2023) தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இதில் திமுக துணைப் பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி உள்ளிட்ட பலர் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டனர்.