அதிமுக-தமிழக பாஜக இடையே நிலவி வரும் கருத்து மோதல்கள் குறித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவுரை கூறியுள்ளதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் பாஜக மகளிர் அணித் தலைவர் ஜெயஸ்ரீ தலைமையில், மகளிர் தின விழாவை முன்னிட்டு முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சிவராஜ் பெயரில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட கோவை மாவட்ட பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பல்வேறு சாதனைகளைப் புரிந்த மகளிருக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
பின்னர் நிழச்சியில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீநிவாசன்,
ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்குகின்ற கல்வித்துறை, அரசுத் துறை ,சுய உதவிக் குழுக்கள், மருத்துவம், என்று பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகின்ற பெண்களுக்குத் திருமதி சுஷ்மா சிவராஜ் விருது வழங்குவது அடுத்த கட்ட தலைமுறைக்கு எடுத்துச் செல்ல முன்னுதரணமாக இருக்கும் என்று தெரிவித்தார்.
மேலும் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்கள், பணியில் இருக்கும் மற்றும் இல்லத்தரசிகளுக்குக் கூடுதல் அதிகாரமளிக்கும் வகையில் ஜல்ஜீவன் இயக்கம், உஜ்வாலா திட்டம், பிரதமரின் வீட்டுச்சதித்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாகப் பிரதமர் செயல்படுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வானதி ஸ்ரீநிவாசன்,
அதிமுக-தமிழக பாஜக இடையே நிலவி வரும் கருத்து மோதல்கள் குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதில் அளித்த அவர்,
கடந்த சில நாட்களாக அதிமுக-தமிழக பாஜக இடையே நிலவி வரும் கருத்து மோதல்கள் நிலவி வருகிறது உண்மை தான் என்றும்,
மேலும் இது தொடர்ந்து நடைபெற்றால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குப் பிளவை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து தேசிய தலைமையிடம் தெரிவிக்கப் பட்டதாகவும், சமீபத்தில் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா
கிருஷ்ணகிரி வந்த பொழுது, தமிழக பாஜக அனைத்து தலைவர்களையும் அழைத்து இது போன்ற விரும்பதாக கருத்து மோதல்கள் நடைபெறாமல் இருக்க பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவுரை கூறியுள்ளதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.