வாரிசு திரைப்படத்தில் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் விஜயின் உணவு ரகசியத்தைப் பதித்துள்ள சம்பவம் தற்பொழுது வைரலாகி வருகிறது.
இந்த ஆண்டு விஜய் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியானது. இந்த படத்தில் நடிகர் விஜய்,நடிகை ரஷமிகா மந்தனா, சரத்குமார் பிரபு ,பிரகாஷ்ராஜ், ஜெயசுதா, ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா ,கணேஷ் எனப் பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளது. வாரிசு திரைப்படத்தைத் இயக்குநர் வம்சி இயக்கினார்.
மேலும் இந்த வாரிசு திரைப்படத்திற்குத் தவம் இசை அமைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளில் வாரிசு திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் மட்டும் இன்றி ரசிகர்கள் மத்தியில் மேலும் வரவேற்பைப் பெற்றது.
மேலும் இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் 11 நாட்களில் உலகம் முழுவதும் 250 கோடியை வசூலாகப் பெறப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு ”வாரிசு படக் குழுவினர் ரசிகர்கள் கொண்டாட்டம்” என்ற தலைப்பில் பிரத்தியேக நேர்காணல் ஒன்றை அளித்தனர். அந்த நிகழ்ச்சிகள் இயக்குநர் வஞ்சி நடிகர் சரத்குமார் ஜெயசுதா ஷாம் பாடலாசிரியர் விவேக் எனப் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது அந்த நேர்காணலில் நடிகர் விஜயின் உணவுக்கட்டுப்பாடு திட்டம் குறித்த கேள்விக்குப் பதில் அளித்த நடிகர் சாம் மற்றும் வம்சி,இந்த கேள்வி குறித்து விஜய் இடம் கேட்டால் காலையில் பொங்கல் , பூரி ,சாப்பிட்டேன், மதியம் இரண்டு சப்பாத்தி, சிக்கன் , கொஞ்சம் சாதம் மாலையில் வீடு நல்லா இருந்தால் சாதம் இல்லன்னா சப்பாத்தி என்று சொல்லுவார்.மேலும் எல்லோரும் எப்படி சாப்பிடுகிறார்கள் அவ்வாறே இயல்பாகச் சாப்பிடுவார். மேலும் அளவாக சாப்பிட்டால் நிச்சயமாக இருக்கலாம் என்று வம்சி மற்றும் ஷாம் தெரிவித்துள்ளனர்.