கள்ளக்குறிச்சி மாவட்டதில் 144 நாட்களுக்குப் பின் கனியாமூரில் உள்ள சக்தி தனியார் பள்ளி மீண்டும் கடந்த 2022 ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி திறக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கணியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி உயிரிழந்ததைத் அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி போராட்டம் நடைபெற்றது.
கணியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் தொடர்ந்து ஜூலை 17-ம் தேதி கலவரம் ஏற்பட்டது. கலவரம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை போலீசார் அமைத்துள்ளனர். ஸ்ரீமதியின் பெற்றோரின் கோரிக்கையின்படி, வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதேபோல் மாணவி மரணம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் அப்பள்ளியிலிருந்த பொருட்கள் உட்பட பள்ளி வளாகத்தை சேதப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்தப் பள்ளி மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி பள்ளியை மீண்டும் திறப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஷரவன்குமார் உடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் ,பெற்றோர் – ஆசிரியர் கழகத்தின் சார்பில் பள்ளிகள் திறப்பது குறித்து கோரிக்கை வைத்தனர்.மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 9 முதல் 12 ஆம் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை நடத்தும் பொருட்டு, டிசம்பர் 5 ஆம் தேதி முதல் சோதனை அடிப்படையில் ஒரு மாத காலம் நேரடி வகுப்புகளை நடத்த உத்தரவிட்டது.
மேலும் இது தொடர்பாக பள்ளியில் ஏ மற்றும் பி பிளாக்குகளை பயன்படுத்தலாம் என்றும், அதேசமயம் ஏ பிளாக்கின் விடுதி இயங்கி வந்த 3வது மாடி தளத்தை பயன்படுத்தக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு பள்ளி திறக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி பள்ளிக்கு மீண்டும் திரும்பும் மாணவர்களின் மனதில் நம்பிக்கை ஏற்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன என அறிக்கை தாக்கல் செய்ய என கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் ஏற்கனவே நடந்த நிகழ்வு மாணவர்களின் நினைவில் வரும்; மனநல ஆலோசனைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 9-12ம் வகுப்புக்கு பள்ளி திறக்கப்பட்டு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை என பள்ளி நிர்வாகம் சார்பில் பதிலளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தற்போதைய சூழலை ஆராய்ந்து அறிக்கை அளிப்பதாக அரசு தரப்பு விளக்கத்தை ஏற்று விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.