துபாயில் நடைபெற்ற கார் பந்தய போட்டியில் நடிகர் அஜித்குமாரின் அணி வெற்றி பெற்ற நிலையில் அவருக்கு அரசியல் தலைவர்கள் , ரசிகர்கள் , திரை நட்சத்திரங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது ரசிகர்கள் குறித்து நடிகர் அஜித்குமார் போட்டுள்ள அறிக்கை தற்போது இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.
அஜித் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது :
துபாய் கார் பந்தய ரேஸின் போதும் நிகழ்வுக்கு பின்னரும் இப்போதும் எப்போதும் நீங்கள் எனக்கு கொடுத்து வரும் ஆதரவும் ஊக்கமும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லாம் வல்ல இறைவன் எனது குடும்பத்தினர். திரைத்துறையினர். ஊடகங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டுப் பிரமுகர்கள், நலம் விரும்பிகள் மற்றும் எனது அன்புக்குரிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகள் போதவில்லை.
Also Read : அஜித்தை பின்தொடர்ந்து ஜெயம் ரவி எடுத்த திடீர் முடிவு..!!
இந்த அசைக்க முடியாத அன்பும் ஊக்கமும்தான் எனது ஆர்வத்திற்கும் விடாமுயற்சிக்கும் உந்து சக்தியாக உள்ளது. என் முன் இருக்கும் சவால்களை உடைத்து மோட்டார்ஸ்போர்ட்டில் புதிய சாதனைகள் படைக்கவும் தூண்டுதலாக உள்ளது.
இந்த பயணம் என்னைப் பற்றியது மட்டுமல்ல! உங்களைப் பற்றியதும்தான். நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மெய்ப்பிக்க ஒவ்வொரு நொடியும் நான் கடமைப்பட்டுள்ளேன். அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் மற்றும் சங்கராந்தி நல்வாழ்த்துக்கள் என நடிகர் அஜித் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.