Site icon ITamilTv

மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் : 2 பேர் கைது.. 3 பெண்கள் மீட்பு!!

மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்

மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்

Spread the love

சென்னையில், மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடத்திய நிலையில், 3 பெண்கள் மீட்கப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை டி.பி.சத்திரம் பகுதியில் மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடத்திய 2 நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 3 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க : கோவையில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.14 கோடி நில அபகரிப்பு!

முன்னதாக, சென்னையில் அப்பாவி இளம் பெண்களை குறிவைத்து நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி, அவர்களை அழைத்துச் சென்று தனியார் நிறுவனங்களில் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி,

பணம் சம்பாதிக்கும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டிருந்தார்.

அந்த உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்த குற்றச் செயல்களில் ஈடுபடும் விபச்சார தரகர்களை கண்டறிந்து கைது செய்து, நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், K-6 டி.பி.சத்திரம் காவல நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அந்த தகவலின் பேரில்,

நேற்று (08.02.2024) காவல் குழுவினர், கீழ்பாக்கம் கார்டன், பெரிய தெருவிலுள்ள அரோமா ஆயுர் கேர் சென்டர் என்ற மசாஜ் சென்டரை கண்காணித்தனர்.

அப்போது, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதி செய்யப்பட்டது.

அதையடுத்து, பெண் காவலர்கள் உள்ளிட்ட காவல் குழுவினர் அந்த மசாஜ் சென்டரில் சோதனைகள் மேற்கொண்டனர்.

அந்த சோதனையின் போது பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய 27 வயதுடைய சரவணன், 26 வயதுடைய ராபின் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க : இந்தியா கூட்டணியில் இருந்து மேலும் ஒரு கட்சி விலகியது!

அதனைத் தொடர்ந்து, சம்மந்தப்பட்ட மசாஜ் சென்டரில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 3 பெண்கள் மீட்கப்பட்டு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சரவணன் மற்றும் ராபின் ஆகியோர் விசாரணைக்குப் பின்னர் நேற்று (08.02.2024) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மசாஜ் சென்டரில் பாலியல் தொழிலில் இளம் பெண்கள் தள்ளப்பட்டு பின் மீட்கப்பட்ட இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Spread the love
Exit mobile version