ITamilTv

சென்னை விமான நிலைய பணியில் தேர்ச்சி பெற்ற 2 மோப்ப நாய்கள் இணைப்பு..!!

Spread the love

சென்னை விமான நிலைய பணியில் தேர்ச்சி பெற்ற 2 மோப்ப நாய்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

போதைப் பொருள், வெடி மருந்து, அரிய வகை வனவிலங்குகள் போன்ற கடத்தல் பொருட்களை, கண்டுபிடிப்பதில் சென்னை விமான நிலையில் தொடர்ந்து பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் கூடுதல் வலு சேர்க்கும் முனைப்பில் சென்னை விமான நிலைய சுங்கத்துறை மோப்பநாய் பிரிவில் மேலும் 2 மோப்ப நாய்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது .

நிபுணத்துவம் உடையவை பஞ்சாப் மாநிலம், அட்டாரியில் மோப்ப நாய்கள் பயிற்சி மையத்தில் 9 மாதங்கள் பயிற்சி பெற்றுள்ள இந்த மோப்ப நாய்கள் இன்று சென்னை விமான நிலையத்தில் இணைக்கப்பட்டது. இதன்மூலம் சென்னை விமான நிலையத்தில் மோப்ப நாய்கள் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது .


Spread the love
Exit mobile version