ITamilTv

4ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திமுக ஆட்சி! – மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ

3 Yrs of DMK TN Govt

Spread the love

திமுக ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.முக ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின், நேரே கோட்டைக்குச் சென்று முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தவுடன் தமிழ்நாட்டு மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தொடங்கி,

“விடியல் பயணத் திட்டம்” கொரோனா நிவாரண உதவித் தொகை ரூ.4,000/- வழங்கும் திட்டம், முதல்வரின் முகவரித்துறை உருவாக்கும் திட்டம், பால்விலை லிட்டருக்கு 3 குறைப்புத் திட்டம், பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 குறைப்புத் திட்டம் ஆகிய 5 கோப்புகளில் முதன் முதல்

ஆணைகள் பிறப்பித்து, நிறைவேற்றி, “சொன்னதைச் செய்வோம் செய்வதைச் சொல்வோம்” என்பதுடன், “சொல்லாததையும் செய்வோம்” எனக் கூறி மக்களுக்கு மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் வழங்கினார்.மேலும் தற்போது வரை 210க்கும் மேற்பட்ட திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: +2 தேர்வு முடிவில் கடைசி 15 இடங்களில் டெல்டா மாவட்டங்கள்..- ராமதாஸ் வேதனை!

அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களுக்காக கர்ப்பிணிப் பெண்கள் சுகாதாரம்,மருத்துவமனைகளில் மகப்பேறுகள், மகப்பேறுக்கும் பிந்திய கவனிப்பு (ANTENATAL CARE),இந்தியாவில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், ஜவுளித் துணிகள் ஏற்றுமதி,ஆயத்த ஆடைகள் (Readymade Garments) ஏற்றுமதி, தோல் பொருள்கள் ஏற்றுமதி, தொழில் துறை, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட துறைகளில் அவர் ஆற்றிய சாதனைகள் எல்லாம் தமிழ்நாட்டை இந்தியாவின் முதல் மாநிலமாக உயர்த்தியுள்ளது.

இந்த நிலையில், கிண்டியில் பன்னோக்கு மருத்துவமனை ஓராண்டுக்குள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மதுரையில் கலைஞர் நினைவு நூலகமும் திறக்கப்பட இருக்கிறது. அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்பட இருக்கிறது.

12 மணி நேர வேலை மசோதாவை நிறைவேற்றி பின்னர் திரும்பப்பெற்றது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கிய திமுக அரசு, இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

இந்த நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

இது குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,”இது சொல்லாட்சி அல்ல; செயலாட்சி!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இது சொல்லாட்சி அல்ல; செயலாட்சி; மக்களின் நன்றி கலந்த வாழ்த்தும், புன்னகை அரும்பும் முகங்களும் இன்னும் உழைக்கத் தூண்டுகிறது

நம்பிக்கையோடு முன்செல்கிறேன்; பெருமையோடு சொல்கிறேன்; தலைசிறந்த மூன்றாண்டு; தலைநிமிர்ந்த தமிழ்நாடு; தினம்தோறும் மக்கள் முகங்களில் இருக்கும் மகிழ்ச்சியே நல்லாட்சியின் சாட்சி – திமுக ஆட்சி 3 ஆண்டு நிறைவு செய்ததையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.


Spread the love
Exit mobile version