Site icon ITamilTv

கோவையில் குழந்தை விற்பனையில் ஈடுபட்ட பீகாரைச் சேர்ந்த 4 பேர் கைது..!!

selling children in kovai

selling children in kovai

Spread the love

கோவையில் குழந்தை விற்பனையில் ஈடுபட்ட பீகாரைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் ( selling children in kovai ) பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவையில் அப்பநாயக்கன்பட்டியில் ஹோட்டல் நடத்தி வந்த பீகாரைச் சேர்ந்த மகேஷ்குமார் – அஞ்சலி தம்பதி, அஞ்சலியின் தாய் பூனம், அவரது சகோதரி மேக்குமாரி ஆகியோர் பீகாரில் இருந்து குறைந்த விலைக்கு பச்சிளம் குழந்தைகளை வாங்கி வந்து சட்டவிரோதமாக விற்று வந்துள்ளனர்.

இந்நிலையில் விஜயன் என்பவருக்கு ஒரு பெண் குழந்தையை இந்த கும்பல் விற்றுள்ளது . இந்த தகவல் போலீசாருக்கு தெரிய வர சத்தமின்றி இந்த கும்பலை கொத்தாக தூக்கியுள்ளனர்.

Also Read : விருதுநகர் அருகே பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து – வேதனை தெரிவித்த அண்ணாமலை

இதையடுத்து அந்த கும்பலிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பீகாரில் ஏழைப் பெண்களை குறிவைத்து குழந்தையை மிகவும் குறைந்த விலைக்கு வாங்கி வந்து 2.5 லட்சம் ரூபாய்க்கு விற்றது விசாரணையில் தெரியவந்துள்ளது .

இதையடுத்து சட்டவிரோதமாக குழந்தை விற்பனையில் ஈடுபட்ட பீகாரைச் சேர்ந்த 4 போரையும் சட்டவிரோதமாக பணம் கொடுத்து வாங்கிய விஜயனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுமட்டுமின்றி இன்னும் எத்தனை குழந்தைகளை இந்த கும்பல் சட்டவிரோதமாக விற்றுள்ளது ( selling children in kovai ) என்பதையும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர் .


Spread the love
Exit mobile version