Site icon ITamilTv

சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும் – உத்தராகண்ட் முதல்வர்!!

Spread the love

உத்தரகாசியில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களும் நேற்று வெற்றிகரமாக மீட்கப்பட்ட நிலையில், மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று உத்தராகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளார்.

முன்னதாக, நேற்று மாலை முதல்வர் புஷ்கர் சிங் தாமி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, 41 தொழிலாளர்களும் மீட்கப்பட்டபோது அவர்களை மாலை அணிவித்து வரவேற்று, சிறிது நேரம் அவர்களுடன் உரையாடினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் தாமி கூறியதாவது..,

“சுரங்கத்தினுள் சிக்கியிருந்த தொழிலாளர்களை பணியமர்த்திய நிறுவனங்கள் ஊதியம் பிடித்தம் செய்யாமல் 15 முதல் 30 நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

மேலும், சுரங்கப்பாதையின் முகப்பில் இருந்த பாபா பைத்யநாத் கோயில் இடிக்கப்பட்டது தான் இந்த விபத்துக்குக் காரணம் என்ற செய்தி பரவிய நிலையில், அந்த இடத்தில் புதிய கோயில் கட்டப்படும் என்றும் முதல்வர் புஷ்கர் சிங் தாமி வாக்குறுதி அளித்துள்ளார்.


Spread the love
Exit mobile version