Site icon ITamilTv

மதுராந்தகம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் ஓட்டுநர் உட்பட 5 பேர் உயிரிழப்பு..!!

Spread the love

மதுராந்தகம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் ஓட்டுநர் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள ( accident ) சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த அப்துல் ஹமீத் . வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பிய நிலையில் மீண்டும் பணியில் சேர சவுதிக்கு செல்வதற்காக பண்ருட்டியில் இருந்து தனது குடும்பத்துடன் காரில் சென்றுள்ளார் .

தந்தையை வழியனுப்புவதற்காக அவரது மகன்கள் மற்றும் மனைவி ஆகியோர் சென்னை விமான நிலையத்தில் அவரை வழி அனுப்பிவிட்டு வீடு திரும்பியுள்ளனர்.

Also Read : அதிகரிக்கும் வெஸ்ட் நைல் காய்ச்சல் பரவல் : பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை..!!

சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக வீடு திரும்பி கொண்டிருந்தபோது சென்னையில் இருந்து இரும்பு பொருட்களை ஏற்றி வந்த லாரியின் பகுதியில் கார் அதிவேகமாக மோதியுள்ளது.

எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட இந்த விபத்தில் கார் ஓட்டுநர் சரவணன், அப்துல் ஹமீத் மனைவி ஜெய் பினீஷா, அவரது மகன்கள் மிக்சால், பைசல் , அத்தல் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.

தகவல் அறிந்து சமத்துவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விபத்தில் சிக்கி இறந்தவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தந்தையை வழியனுப்பி விட்டு வீடு திரும்பியபோது லாரி மீது கார் மோதிய ( accident ) விபத்தில் ஓட்டுநர் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


Spread the love
Exit mobile version