ITamilTv

நடிகை குஷ்பூ-வை ஆபாசமாக பேசிய திமுக நிர்வாகி! – மன்னிப்பு கேட்ட கனிமொழி! – திமுக நிர்வாகி பேசியது என்ன? – வைரல் வீடியோ

Spread the love

நடிகையும் பாஜக-வை சேர்ந்த நிர்வாகியுமான குஷ்புவை திமுக பொதுக்கூட்டத்தில் திமுக பேச்சாளர் ஒருவர் ஆபாசமான முறையில் பேசியதற்கு குஷ்பூ கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி வருத்தம் கேட்டுள்ளார்.

திமுகவை சேர்ந்த பேச்சாளர் சைதை சாதிக் பொதுமேடையில் பெண்கள் குறித்து பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கடுமையான கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். ஒரு பெண்ணை தரக்குறைவாக ஆபாசமாக பேசுவதுதான் திராவிட மாடலா என பாஜக ஆதரவாளர்கள் டுவிட்டரில் கொந்தளித்து வருகின்றனர்.

இந்நிலையில்,இது தொடர்பாக நடிகை குஷ்பு  தனது எதிர்ப்பை டுவிட்டரில் பதிவு செய்து கனிமொழியிடம் கேள்வியெழுப்பியிருந்தார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள குஷ்பு;

‘’ஆண்கள் பெண்களை இழிவாக பேசினால், அது அவர்கள் வளர்த்த விதமான வளர்ப்பையும், அவர்கள் வளர்ந்த நச்சு சூழலையும் காட்டுகிறது. இந்த ஆண்கள் ஒரு பெண்ணின் கருப்பையை அவமதிக்கிறார்கள். அத்தகைய ஆண்கள் தங்களை #கலைஞரின் பின்பற்றுபவர்கள் என்று அழைக்கிறார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையின் கீழ் இதுதான் புதிய திராவிடமா” என்று கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், கனிமொழியையும் அவர் டேக் செய்திருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக மன்னிப்பு கேட்டு டுவிட்டரில் கனிமொழி பதிவிட்டுள்ளார்.

அதில், ‘ஒரு பெண்ணாகவும், மனிதனாகவும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். யார் செய்தாலும், சொல்லப்பட்ட இடம் அல்லது அவர்கள் கடைபிடிக்கும் கட்சி எதுவாக இருந்தாலும் இதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. திமுக இதை ஒருபோதும் ஏற்காது. எங்கள் தலைவர் ஸ்டாலினும் திமுக-வும் இதனை ஒருபோது மன்னிக்கமாட்டார்கள்’ என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், வருத்தம் தெரிவித்த கனிமொழிக்கு குஷ்பூ நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மிக்க நன்றி கனி. உங்கள் நிலைப்பாட்டையும் ஆதரவையும் உண்மையிலேயே பாராட்டுகிறேன். ஆனால் நீங்கள் பெண்களின் கண்ணியம் மற்றும் சுயமரியாதைக்காக எப்போதும் துணை நிற்கும் ஒருவராக இருந்திருக்கிறீர்கள்” என பாராட்டியுள்ளார்.


Spread the love
Exit mobile version