ITamilTv

ஆதித்யா எல்-1: சூரியன் ஆய்விலும் தமிழர் தான்..!!

Spread the love

இஸ்ரோவின் அடுத்த இலக்கான ‘ஆதித்யா எல்-1’ விண்கல திட்ட இயக்குனராக தென்காசி பெண் விஞ்ஞானி நிகர் ஷாஜி பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜூலை 23 ஆம் தேதி நிலவின் தென்துருவத்தில் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்வதற்காக ‘ஆதித்யா எல்-1’ விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் நாளை காலை 11.50 மணிக்குவிண்ணில் ஏவப்பட்ட உள்ளது. அதற்கான கவுண்டவுன் இன்று தொடங்கியுள்ளது.

இந்த நிலையில்,தென்காசியை சேர்ந்த ‘ஆதித்யா எல்-1’ விண்கலத்தின் திட்ட இயக்குனராக பெண் விஞ்ஞானி நிகர் ஷாஜி பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாக உள்ளது.

செங்கோட்டை RMS பள்ளிக்கூடத்தில் பயின்ற நிகர் ஷாஜி, பிளஸ்-2 தேர்வில் மாவட்டத்தில் முதலிடம் பிடித்தார்.இவர் நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து பிர்லா இன்ஸ்டிடியூட் டெக்னாலஜி நிறுவனத்தில் மேல்படிப்பை பயின்று, இஸ்ரோவில் பணியில் சேர்ந்தார்.

தற்பொழுது ‘ஆதித்யா எல்-1’ விண்கலம் முழுக்க முழுக்க இந்தியாவிலே தயாரிக்கப்பட்டதுகுறிப்பிட்டதக்கது.


Spread the love
Exit mobile version