Site icon ITamilTv

இங்கு ஆட்சியா நடக்கிறது ?ஆளும் கட்சி சார்ந்தவர்களுக்கே பாதுகாப்பு இல்லை- ஜெயக்குமார்!!

Spread the love

திமுக ஆட்சியில் குழந்தை கடத்தல், பாலியல் துன்புறுத்தல் போன்று பல்வேறு குற்ற சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்(jayakumar) குற்றம்சாட்டியுள்ளார்.

அதிமுக கட்சியின் 52 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா அவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் கட்சி கொடியேற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

அதன் பின் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூத் வாரியாக, பூத் கமிட்டி அமைத்தல், இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்துதல் முதலான பணிகளை மேற்பார்வையிடுவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்தித்து பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறுகையில்..

புரட்சி தலைவர் மறைவுக்கு பின்பு இந்த இயக்கம் இருக்காது என்று நினைத்தார்கள் , புரட்சி தலைவி கட்சியை கொடியை மீட்டு சிறப்பாக ஆட்சி நடத்தினார்.

அம்மா வழியில் எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு 2 கோடி தொண்டர்கள் வரை அதிகரித்து மிக பெரிய இயக்கமாக வளர்த்து உள்ளார்.கழக பொதுச் செயலாளர் தலைமையில் மாவட்ட மேற்பார்வையாளர் கூட்டம், 52 ஆம் ஆண்டு தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது. இன்று நடைபெற்ற கூட்டத்தில் கள அளவில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

திமுக ஆட்சியில் குழந்தை கடத்தல், பாலியல் துன்புறுத்தல் நடைபெற்று வருவது குறித்த கேள்விக்கு..

அதிமுக ஆட்சியில் எங்காவது ஒருசில குற்ற சம்பவங்கள் நடந்திருக்கலாம். ஆனால் தற்போது உள்ள திமுக ஆட்சியில் குழந்தை கடத்தல், பாலியல் துன்புறுத்தல் போன்று பல்வேறு குற்ற சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது.


Spread the love
Exit mobile version