Site icon ITamilTv

டாட்டூ தகராறில் கள்ளக்காதலி கொலை – சூட்கேசால் சிக்கிய கள்ளக்காதலன்..!!!

affair girl murder

affair girl murder

Spread the love

ஏற்காட்டில் சூட்கேஸில் இளம்பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் கள்ளக்காதலியைக் கொலை (affair girl) murder செய்ததாக கள்ளக்காதலன் மற்றும் அவரது நண்பனை போலீசார் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் 40 அடி பாலம் அருகே கிடந்த சூட்கேஸில் துர்நாற்றம் வீசிய தகவலில், போலீசார் சூட்கேசை கைப்பற்றி திறந்து பார்த்தபோது அதனுள் இளம்பெண் ஒருவரை கொலை செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருருந்தது தெரியவந்தது.

அரை நிர்வாணத்துடன், முகம் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாமல் இருந்த இளம்பெண் யார் எனது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

சடலம் வைக்கப்பட்டிருந்த சூட்கேஸ் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த சூட்கேஸ் கோவையில் வாங்கப்பட்டிருப்பதும், அதனை திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பறவைக்கோட்டை பகுதியை சேர்ந்த நட்ராஜ் (வயது 32) என்பவர் வாங்கிச் சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் நட்ராஜைப் பிடித்து விசாரித்தபோது டாட்டூ தகராறில் கள்ளக்காதலையை கொலை செய்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியது.

திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தந்தையான நட்ராஜ், கத்தார் நாட்டில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது அங்கு வேலை செய்த வந்த தேனி மாவட்டம் முத்துலாபுரத்தை சேர்ந்த சுபலட்சுமியுடன் (வயது33) நட்ராஜுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கணவரைப் பிரிந்து வாழும் சுபலட்சுமிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

அந்நிய தேசத்தில் தமிழர்கள் என்னும் முறையில் அறிமுகமான இருவருக்கு இடையேயும் அன்னியோன்யம் அதிகரித்த நிலையில், நட்பைத் தாண்டிய நெருக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் வெளிநாட்டில் இருவரும் ஜோடியாக சுற்றித் திரிந்ததோடு, உல்லாச வாழ்க்கையையும் அனுபவித்துள்ளனர்.

நட்ராஜ் தனது மனைவி பெயரை நெஞ்சில் பச்சைக் குத்தி வைத்திருப்பதைப் பார்த்த சுபலட்சுமி தனது பெயரையும் பச்சைக் குத்தச் சொல்ல நட்ராஜ், தனது கையில் டாட்டூவாக வரைந்து வைத்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு இருவரும் விடுமுறைக்கு ஊருக்கு வந்துள்ளனர். அப்போது நட்ராஜ் தனது கையில் இருந்தடாட்டூவை அழித்துள்ளார். சில நாட்கள் அவரவர் வீடுகளில் இருந்த ஜோடிகள், அதன்பிறகு கத்தார் நாட்டுக்கு செல்வதாக கூறி விட்டு இருவரும் கோவையில் பீளமேடு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து குடியேறி உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி, நட்ராஜ் கையில் தனது பெயர் இல்லாதது குறித்து சுபலட்சுமி கேள்வி எழுப்ப, இருவருக்குள்ளும் ஏற்பட்ட வாய்த்தகராறு விபரீதமாகி உள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த நட்ராஜ், அங்கு கிடந்த கம்பியை எடுத்து சுபலட்சுமியை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் உயிரிழந்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து தனது நண்பரான கனிவளவனை வீட்டுக்கு வரவழைத்த நட்ராஜ் நடந்த விவரங்களை கூறியுள்ளார். இதன்பின்னர் சூட்கேஸ் ஒன்றை வாங்கி அதில் சுபலட்சுமியின் உடலை வைத்து அடைத்துள்ளனர்.

Also Read : https://itamiltv.com/international-astronomical-union-approves-the-name-shivashakti/

பின்னர் வாடகைக்கு கார் ஒன்றை எடுத்து இவர்களே சூட்கேஸை காரில் வைத்து ஓட்டிச் சென்றுள்ளனர். யாருக்கும் தெரியாமல் சடலத்தை வீசி விடுவதற்காக திருப்பத்தூர் மாவட்டம் ஏஅல்கிரி, கள்ளக்குறிச்சி என்று 2 நாட்களாக சுற்றி வந்துள்ளனர்.

அப்போது, நட்ராஜ் தனது குடும்பத்துடன் ஏற்காடு மலைப்பகுதிக்கு டூர் சென்று வந்தபோது பார்த்த இடம் நினைவில் வரவே, எற்காட்டுக்கு சென்றவர்கள், 40 அடி மலைப்பாதை பகுதியில் சுபலட்சுமி உடல் இருந்த சூட்கேசை வீசிவிட்டு வந்துள்ளனர். பின்னர், ஒருவாரமாக தனது சொந்த ஊருக்கு சென்ற நட்ராஜ், மீண்டும் கோவை வந்து எதுவும் நடக்காதது போல இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து கள்ளக்காதலியை கொலை செய்த நட்ராஜையும், அவருக்கு (affair girl murder) உடந்தையாக இருந்த கனிவளவனையும் போலீசார் கைது செய்து சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர் .


Spread the love
Exit mobile version