ITamilTv

ரேஷன் கடைகளில் உள்ள தகவல் பலகை கட்டாயம் -தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு

all ration shops to-set up information board

Spread the love

ரேஷன் கடைகளில் உள்ள தகவல் பலகைகளில், குடும்ப அட்டைதாரர்கள் தெரிந்து கொள்ளும் வகையில், அத்தியாவசியப் பொருட்களின் கையிருப்பு விவரங்களை காட்சிப்படுத்த வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், தமிழக அரசின் பொது வினியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு, அத்தியாவசியப் பொருட்கள் குறைந்த விலையிலும் வழங்கப்பட்டு வருகின்றன.

நியாய விலைக் கடைகளில், தகவல் பலகைகளில் அத்தியாவசியப் பொருட்களின் கையிருப்பு விவரங்களை எழுதி வைக்க வேண்டும் என, கூட்டுறவுத் துறை பல முறை அறிவுறுத்தியும் பெரும்பாலான கடைகளில் இந்த நடைமுறை கடைபிடிக்கப்படுவதில்லை என புகார் எழுந்துள்ளது.

இது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் கடிதம் எழுதியுள்ளார்.
அதில் குடும்ப அட்டைதாரர்களிடம் இருந்து பெறக்கூடிய புகார்கள் அடிப்படையிலும், நியாய விலைக் கடைகள் தணிக்கையின் போது அறியக் கூடிய விவரங்கள் அடிப்படையிலும், தகவல் பலகைகள் நியாய விலைக் கடைகளில் சரிவர பராமரிக்கப்படுவதில்லை என தெரிய வருகிறது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, ஏற்கனவே வழங்கிய அறிவுரைகளோடு, மேலும் சில அறிவுரைகளும் வழங்கப்படுகின்றன. அதாவது, பொது வினியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் தகவல் பலகைகள் கீழ்காணும் விவரங்களை உள்ளடக்கி, குடும்ப அட்டைதாரர்கள் தெரிந்து கொள்ளும் வகையில், காட்சிப்படுத்தப்பட வேண்டும்.

இன்றியமையாப் பண்டங்கள் இருப்பு விவரம் கடைப் பணியாளரால் தினசரி பூர்த்தி செய்து காட்சிப்படுத்தப்பட வேண்டும். அறிவிப்பு பலகைகளில், நியாய விலைக் கடையின் வேலை நேரம், இன்றியமையாப் பண்டங்கள் (சிறப்பு அத்தியாவசியப் பண்டங்கள் உட்பட) இருப்பு விவரம், ஆரம்ப இருப்பு பெறப்பட்டது, வினியோகம் செய்யப்பட்டது, இறுதி இருப்பு உள்ளிட்ட விவரங்கள் தினசரி பராமரிக்கப்பட வேண்டும்.

all-ration-shops-to-set-up-information-board
all ration shops to-set up information board

இன்றியமையாப் பண்டங்கள் வழங்கப்படும் அளவு மற்றும் அவற்றின் விற்பனை விலை குறித்த தகவல் கண்டிப்பாக இடம் பெற்றிருக்க வேண்டும். மேலும், நியாய விலை கடைகள் தொடர்பாக புகார் தெரிவிக்கக் கூடிய உயர் அலுவலர்களின் தொலைபேசி எண்கள் மற்றும் செல்பேசி எண்கள் இடம் பெற்றிக்க வேண்டும்.

உணவுத் துறை அமைச்சர் 044-2567 1427, உணவுத் துறை செயலாளர் 044-2567 2224, உணவுப் பொருள் வழங்கல் ஆணையாளர் 044-2859 2255 உள்ளிட்டோரின் எண்கள் இடம் பெற வேண்டும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love
Exit mobile version