Site icon ITamilTv

2 வது கணவன் , மாமியாரை கொலை செய்ய முயற்சி; பென்சனுக்காக நடந்த கொடூரம்!

Spread the love

சீர்காழி அருகே பென்ஷன் தொகைக்காக 2வது கணவன் மற்றும் மாமியாரை கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா மேலச்சாலை கிராமத்தைச் சேர்ந்தவர் மில்லர்.47. பால் வியாபாரி. முதல் மனைவி இவரை விட்டு பிரிந்து சென்றதால் கடந்த ஆண்டு கணவனை இழந்த குத்தாலம் தாலுகா சேன்டிருப்பு கிராமத்தைச் சேர்ந்த அம்பிகா.38. என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இவர்களுக்கு ஏழு மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் அம்பிகாவின் முதல் கணவர் ஜெயகண்ணன் தலைமை ஆசிரியராக பணியாற்றி இறந்ததால் அவரது செட்டில்மெண்ட் மற்றும் பென்ஷன் தொகை அம்பிகா பெயருக்கு வந்துள்ளது. இதற்கு மில்லர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், சட்டத்திற்கு புறம்பானது என எச்சரித்துள்ளார்.

இதனால் மில்லர்- அம்பிகா இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு தொடர்பாக வைத்தீஸ்வரன் கோவில் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுக்க தாமதப்படுத்திய நிலையில் மில்லரை பிரிந்து சென்ற அம்பிகா உறவினர்களுடன் மேலச்சாலைக்கு வந்து வீட்டின் கதவுகளை உடைத்து மில்லரை அரிவாலால் வெட்டியதுடன், அவரின் தாயார் சகுந்தலா.70. என்பவரையும் தாக்கி விட்டு தப்பி ஓடியுள்ளனர்.

சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து படுகாயம் அடைந்த மில்லர் மற்றும் அவரது தாயார் சகுந்தலா இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.

தகவல் அறிந்த வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு, மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முதல் கணவரின் செட்டில்மெண்ட் தொகை மற்றும் பென்ஷன் தொகைக்கு ஆசைப்பட்டு 2வது கணவர், மாமியாரை மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Spread the love
Exit mobile version