Site icon ITamilTv

காட்டுப்பக்கம் ஒதுங்கிய மாணவன்.. – பாய்ந்து கடித்து குதறிய கரடி..!

Spread the love

கோவை மாவட்டம் வால்பாறை மலைப்பகுதியில் கரடி, சிறுத்தை, யானை உள்ளிட்ட வன விலங்குகள் அதிகமாக உள்ளது. இதனால் எந்த நேரத்திலும் மக்கள் ஆபத்தை சந்தித்தபடி உள்ளனர்.

வால்பாறை அடுத்த சோலையார் எஸ்டேட் சேர்ந்த முதல் பிரிவில் வசித்து வருபவர் ஆனந்தராஜ். இவரது மகன் ராகுல் (17) தனது அத்தை, மாமாவாகிய விஜயலட்சுமி, தினேஷ்குமார் ஆகியோரது வீட்டில் இருந்து 12ம் வகுப்பு படித்து வருகிறான்.

இன்று அதிகாலை ராகுல் அப்பகுதியில் உள்ள காட்டிற்கு இயற்கை உபாதையை கழிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு புதரில் பதுங்கி இருந்த கரடி திடீரென மாணவன் மீது பாய்ந்து கடித்து குதறியது.

பள்ளி மாணவனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து கரடியை விரட்டிவிட்டு மாணவனை மீட்டனர். உடனடியாக வனத்துறை மற்றும் காவல் துறைக்கு இச்சம்பவம் குறித்து தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் விரைந்து வந்தனர்.

பின்னர், படுகாயம் அடைந்த ராகுலை உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

 

இத சம்பவத்தால் மலை கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர். மேலும் இந்த பகுதியில் சுற்றி திரியும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.


Spread the love
Exit mobile version