சென்னையில் பெண் மென் பொறியாளர் கை, கால்கள் அறுத்து பெட்ரோல் ஊற்றி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையை சேர்ந்த 28 வயதான நந்தினி என்ற இளம்பெண் சென்னையில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் நந்தினி வெற்றி என்ற இளைஞரை நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
ஒருகட்டத்தில் வெற்றி திருநங்கை என்று நந்தினிக்கு தெரியவர அவரிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த வெற்றி நந்தினியை கொலை செய்ய திட்டம் போட்டுள்ளார். இந்நிலையில் நேற்று நந்தினியின் பிறந்த நாள் என்பதால் அவரை கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வெற்றி கூட்டிச் சென்றுள்ளார்.
இதையடுத்து உனக்கு பிறந்த நாள் சர்ப்ரைஸ் தருகிறேன் என கூறி நந்தினியை தனியாக அழைத்துச் சென்று அவரின் கை, கால்களை அறுத்து பெட்ரோல் ஊற்றி எரித்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.
இதையடுத்து தாழம்பூர் அருகே பெண்ணின் கை, கால்களை சங்கிலியால் கட்டிப்போட்டு எரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வந்தனர்.
இதையடுத்து கொலை செய்த வெற்றியை தீவிரமாக தேடி வந்த போலீசார் ரகசிய இடத்தில பதுங்கி இருந்த வெற்றி என்னும் வெற்றிமாறனை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசார் நடத்திய முதற் கட்ட விசாரணையில் நந்தினியை நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், அவர் வேறொரு நபருடன் பழகியதால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக வெற்றி வாக்குமூலம் கொடுத்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.