ITamilTv

சென்னை : 40 மின்சார ரயில்களின் நேரம் மாற்றம் : 6 புதிய ரயில்கள் அறிவிப்பு!

Spread the love

40 Electric Trains Time Change : சென்னை ரயில்வே கோட்டத்தில் பயணிகளின் கோரிக்கைகளை பூர்த்தி செய்யும் வகையில், சென்னை ரயில்வே கோட்டத்தில் சென்ட்ரல் – அரக்கோணம்,

சென்ட்ரல் – சூலூர்பேட்டை ஆகிய மார்க்கங்களில் 40 மின்சார ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. 6 புதியரயில்களும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : கில்லி ரீரிலீஸ்… படத்தில் முதலில் நடிக்கவிருந்தது விஜய் திரிஷா இல்லையாம்!

இது நேற்று முதல் அமலுக்கு வந்தது. பயணிகளின் வசதி, ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு மின்சார ரயில்களின் நேரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

36 மின்சார ரயில்களின் புறப்பாடு நேரம் மாற்றப்பட்டுள்ளது.

திருவள்ளூர் – ஆவடிக்கு இரவு 10.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சென்னை கடற்கரை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 3 மின்சார ரயில்களில் புறப்படும் இடம், பகுதி ரத்து இடம்பெற்றுள்ளன.

40 Electric Trains Time Change

ஆவடி – பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்க்கு அதிகாலை 3 மணி, ஆவடி – சென்னை கடற்கரைக்கு பிற்பகல் 3.20, ஆவடி – மூர்மார்க்கெட் வளாகத்துக்கு மாலை 4.20, இரவு 7.15,

சென்னை கடற்கரை – திருவள்ளூருக்கு காலை 6.10, சென்னை கடற்கரை – ஆவடிக்கு காலை 10.35 மணி ஆகிய நேரங்களில் புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை ரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது 40 Electric Trains Time Change.

இதையும் படிங்க : கிளைசீமிக் இன்டெக்ஸ் (GI) குறைவாக இருக்கும் பழங்கள்! யாருக்குக்கு நல்லது?


Spread the love
Exit mobile version