Site icon ITamilTv

பிரதமர் நரேந்திர மோடி மீது நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும் – கீ. வீரமணி!

K. Veeramani

Spread the love

K. Veeramani : தேர்தல் பிரச்சாரத்தில் ஜாதி, மதம், கடவுள்களை முன்னிறுத்தி பேசும் பிரதமர் நரேந்திர மோடி மீது நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும் என கீ. வீரமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..,

“இந்திய தேர்தல் சட்டப்படி, தேர்தல் பிரச்சாரத்தில் ஜாதி, மதம், கடவுள்களை முன்னிறுத்திடக் கூடாது. அப்படி மத, வகுப்பு உணர்வுகளை மய்யப்படுத்தி செய்யப்படும் தேர்தல் பிரச்சாரம் சட்டப்படி குற்றமாகும் (மக்கள் பிரதிநிதித்துவ தேர்தல் சட்ட விதி 123(3) செக்ஷன்படி).

அப்படி அவற்றைப் பயன்படுத்தி, தேர்தலில் வென்றாலும், அத்தேர்தல் சட்டப்படி செல்லாது என்பதை உச்சநீதிமன்றம் – பல தீர்ப்புகளில் உறுதி செய்துள்ளது.

நாடாளுமன்றத்தின் 18 ஆவது பொதுத் தேர்தல் தொடங்கிய நிலை முதல் பிரதமர் மோடியின் தேர்தல் பிரச்சாரத்தில் ராமன் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்ளாதவர்கள் இந்து விரோதிகள் என்று,

கடவுளையும், மதத்தையும் தேர்தலில் இழுத்துப் பேசுவது எவ்வகையில் நியாயம்?அதுமட்டுமா?காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பற்றிக் குறிப்பிட்டு, அது முஸ்லிம் லீக் கருத்து கொண்டதாக உள்ளது என்று பேசுகிறார்!

இதையும் படிங்க : World Book Day : 2.5 லட்சம் புத்தகங்கள் வழங்கியுள்ளேன் – முதல்வர் ஸ்டாலின்!

அண்மையில் ராஜஸ்தானில், இந்து வாக்கு வங்கியை குறி வைத்து, ”காங்கிரஸ் கட்சிஇந்து சொத்துகளை முஸ்லிம்களுக்குப் பிரித்துக் கொடுக்கவே திட்டமிட்டுள்ளது” என்றும்,

”பொன் பொருளை அவர்களுக்கே பிரித்துக் கொடுப்பார்கள்” என்று மனம் போன போக்கில் பேசி வருவது – நாளும் அவருக்கு வரும் செய்திகளின்படி, ”மக்கள் ஆதரவு குறைந்துவருகிறது.

400 தொகுதி என்கிற கனவு பகற்கனவாகி விடுவதோடு, மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியாத அளவுக்கு மக்கள் வெகுவாகப் புரிந்துகொண்டு விட்டார்கள்” என்பதாலும், அவர் வகிக்கும் பிரதமர் பதவியின் மாண்பையும் கீழிறக்கத்திற்கு ஆளாக்கி வருவது,

நாட்டிற்கே ஊறுவிளைவிக்கும் தேசிய அவமானம் ஆகும். மோடி, அமித்ஷாவின் (ரெய்ப்பூர்) பேச்சு முழு சட்ட மீறல், தண்டனைக்குரிய குற்றமாகும்.

இதனை நாளும் தேர்தல் ஆணையத்திற்குச் சுட்டிக்காட்டியும், எந்த நடவடிக்கையையும் பிரதமர் பேச்சின்மீது இதுவரை எடுக்கவே இல்லை!

”சட்டத்தின்முன் அனைவரும் சமம்” என்ற தத்துவம் ஏன் பிரதமர் பேச்சு விஷயத்தில் மட்டும் காணாமற்போக வேண்டும் – சட்டம் அனைவருக்கும் பொதுச் சட்டம்தானே. நாட்டில் மத வகுப்புக் கலவரங்களை வெடிக்கச் செய்யும் நிலையை ஆளும் பிரதமரே தூண்டுவதுபோல் பேசலாமா?

எனவே, நிலைமை மேலும் மோசமாகமலிருக்க (காரணம் ஜூன் முதல் தேதி வரை ஏழு கட்டத் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் நிலையில்) ஜனநாயகத்தையும்,

அரசமைப்புச் சட்ட மாண்பு – அரசியல் விழுமியங்களைக் காக்கும் பெரும் பொறுப்பு – மக்களின் கடைசி நம்பிக்கையான உச்சநீதிமன்றத்திடம்தான் என்பதால், உடனடியாக முன்வந்து, பிரதமருக்குத் தாக்கீது அனுப்பி வழக்குப் பதிவு செய்யவேண்டும்.

”எதையும் பார்க்காமல் சட்டம், நீதி தனது கடமையைச் செய்தாக வேண்டும்” என்பதை வலியுறுத்தத்தானே.

எனவே, உச்சநீதிமன்றம் தானாகவே முன்வந்து (‘Suo Moto’) தன்னிச்சையாக வழக்கை எடுத்துக் கொள்வதே – நாட்டின் ஜனநாயகம் காக்க, விருப்பு வெறுப்பு அரசியல் என்ற அறத்தை விழுங்கும் அநியாய அலங்கோலம் தலைவிரித்தாடாமல் தடுக்கப்பட அதுவே ஒரே வழி! சட்டம்” என்று தெரிவித்துள்ளார் K. Veeramani.

இதையும் படிங்க : மன்னிப்பு கேட்டீங்களா? விளம்பரத்தை லென்ஸ் வைத்து தேட வேண்டியுள்ளது – நீதிபதிகள் அதிருப்தி!


Spread the love
Exit mobile version