Site icon ITamilTv

10 பேர் உயிரை பறித்த பட்டாசு ஆலை விபத்தில் பட்டாசு ஆலை மேற்பார்வையாளர் கைது..!!

Supervisor arrested

Supervisor arrested

Spread the love

சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் ( Supervisor arrested ) பட்டாசு ஆலை மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிவகாசி அடுத்த செங்கமலப்பட்டி அருகே இயங்கி வந்த பட்டாசு ஆலையில் நேற்று வெடி விபத்து ஏற்பட்டுள்ளது . இந்த விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் .

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .

Also Read : கேப்டன் விஜயகாந்திற்கு பணத்மபூசன் விருது – நெகிழ்ச்சியுடன் விருதை பெற்ற பிரேமலதா விஜயகாந்த்

இதையடுத்து இந்த விபத்து குறித்து விசாரணை நடத்திய போலீசார் உராய்வு காரணமாக ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனர் .

இதுமட்டுமின்றி பட்டாசு ஆலையில் அனுமதி பெறப்பட்ட அறையில் பட்டாசு தயாரிக்காமல், அளவுக்கு அதிகமாக ஆட்களை வைத்து மரத்தடியில் பட்டாசு தயாரித்துள்ளனர் என்றும் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பட்டாசு தயாரிப்பு நடந்த நிலையில், உராய்வு ஏற்பட்டு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

இந்நிலையில் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பட்டாசு தயாரிக்கப்பட்டு ( Supervisor arrested ) வந்த பட்டாசு ஆலையின் மேற்பார்வையாளர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Spread the love
Exit mobile version