ITamilTv

தீவிர புயலாக வலுவடைந்தது ‘மிக்ஜாம்’ புயல்..!!

Spread the love

சென்னையை புரட்டிப்போட்டு வரும் மிக்ஜாம் புயல் தற்போது தீவிர புயலாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

சென்னைக்கு கிழக்கு, வடகிழக்கு திசையில் 90 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ள மிக்ஜாம் புயல் தற்போது தீவரை புயலாக வலுவடைந்துள்ளது

புயல் தொடர்ந்து வடக்கு திசையில் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிக்கு இணையாக நகர்ந்து நாளை முற்பகலில் ஆந்திராவின் பாபட்லா என்ற இடத்திற்கு அருகே தீவிரப் புயலாக கரையைக் கடக்கக்கூடும்.

இதன் காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று மாலை வரை கன முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏற்கனவே விடமால் பெய்து வரும் கனமழையால் சென்னையின் பலவேறு பகுதிகள் மழை நீரில் மூழ்கியுள்ள நிலையில் மேலும் மழை அதிகரிக்கும் என்பதால் பொதுமக்கள் அனைவரும் அச்சத்துடன் வீட்டுக்குளேயே முடங்கியுள்ளனர்.

இதுமட்டுமின்றி சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Spread the love
Exit mobile version