ITamilTv

திமுக அரசின் அலட்சியப் போக்கு.. போக்குவரத்துத்துறை அமைச்சரே ஒப்புக் கொண்டிருக்கிறார் – அன்புமணி சாடல்!

Anbumani Ramadoss

Spread the love

Anbumani Ramadoss : அரசு பேருந்தில் நடத்துனர் அமர்ந்திருந்த இருக்கை கழன்று, இருக்கையுடன் நடத்துனரும் வெளியில் தூக்கி வீசப்பட்டுள்ள சம்பவம், அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு மோசமான எடுத்துக்காட்டு என அன்புமணி ராமதாஸ் சாடியுள்ளார்.

இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் (Anbumani Ramadoss) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது..

“திருச்சியில் ஸ்ரீரங்கத்தில் இருந்து கே.கே. நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது நடத்துனர் அமர்ந்திருந்த கடைசியில் இருந்து மூன்றாவது இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது.

இருக்கையுடன் நடத்துனரும் வெளியில் தூக்கி வீசப்பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால் நடத்துனர் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். காயமடைந்த நடத்துனர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி 6-ம் தேதி மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார். அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே திருச்சியில் பேருந்தின் இருக்கை கழன்று நடத்துனர் தூக்கி வீசப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : பிரதமர் நரேந்திர மோடிக்கு, மல்லிகார்ஜுன கார்கே கடிதம்!

பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதைவிட மோசமான எடுத்துக்காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1,500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதை தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே ஒப்புக் கொண்டிருக்கிறார்.

Anbumani Ramadoss

15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இவை தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் 12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும் அவற்றை பராமரிப்பதற்கும் உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாதது தான் இத்தகைய அவல நிலை ஏற்படுவதற்கு காரணம் ஆகும்.

இத்தகைய அவல நிலைக்கு திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதல்-அமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் கார்கள் கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக,

ஏற்கனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன கார்கள் ஓரங்கட்டப்பட்டு கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய கார்கள் வாங்கப்படுகின்றன. ஆனால் பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும் பேருந்துகள் மட்டும் 15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும்.

பழைய பேருந்துகளை பராமரிக்கவும், உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார் Anbumani Ramadoss.

இதையும் படிங்க : தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டில் தற்கொலை முயற்சி! பரபரப்பு சம்பவம்!


Spread the love
Exit mobile version