Site icon ITamilTv

உயர்கல்வி நிறுவனங்களில் படிக்க செல்லும் 225 அரசுப்பள்ளி மாணவர்கள் – சான்றிதழ்கள் வழங்கி முதலமைச்சர் பாராட்டு!

Spread the love

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ள 225 மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, மடிக்கணினிகளும் வழங்கினார்.

அதன்பின்னர் விழாவில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..

நாட்டின் முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களில் 225 அரசுப்பள்ளி மாணவர்கள் படிக்க செல்கின்றனர். அவர்களுக்கு சிறிய உதவி கிடைத்தாலும் படிப்பில் அடித்து தூள் கிளப்புவார்கள் தமிழக மாணவர்கள். நமக்கான கல்வி நம் முன்னோர்களின் போராட்டத்தால் தான் கிடைத்த்துள்ளது.

தமிழக மாணவர்கள் அனைவருக்கும் சமச்சீர் கல்வி கிடைக்க வேண்டும் என்று அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம். தமிழக மாணவர்கள் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான பாதையை திராவிட மாடல் அரசு உருவாக்கியுள்ளது.

ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனியாய் இருந்த கல்வி இன்று எல்லோரையும் சென்று சேர்ந்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் நல்ல கல்வி கிடைத்து அவர்கள் உயர்கல்விக்கு செல்ல வேண்டும். அதன்படி, இந்த ஆண்டு ஐஐடியில் படிக்க அரசுப் பள்ளி மாணவர்கள் 6 பேர் சென்றுள்ளனர்.

ஏற்ற தாழ்வு இல்லாத ஒரு சமுதாயம் உருவாக வேண்டுமென்றால் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும். தற்போது, அரசுப்பள்ளிகளில் கல்வித்தரம் உயர்ந்திருப்பது உலகிற்கு தெரியவந்துள்ளது. கடந்தாண்டு உயர்கல்வி நிறுவனங்களுக்கு 75 பேர் சென்றுள்ள நிலையில், இந்த ஆண்டு மேலும் 225 மாணவர்கள் செல்கின்றனர்.

அதன்படி, உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு உயர்ந்து உள்ளது. உயர்கல்வி நிறுவனங்களில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேரும்போது தான் சமூகநீதி முழுமையடைகிறது. எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும். அது கல்வியிலும் கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் அரசின் நிலைப்பாடு என்று கூறினார்.


Spread the love
Exit mobile version