Site icon ITamilTv

திருப்பதியில் பிப்.15 -17 Free Darisanam டோக்கன் ரத்து

Free Darisanam

Free Darisanam

Spread the love

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்.15 -17 தேதிக்கான (Free Darisanam) இலவச தரிசனம் டோக்கன் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

உலக பிரசித்திபெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பெரும்பாலான பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப நடைபாதை வழியாக திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்வது வழக்கம்.

தினம்தோறும் ஏரளமான பக்தர்கள் நம்பிக்கையுடன் தங்கள் வாழ்வில் சிறக்க வேண்டும் என்று திருப்தி ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக வரக்கூடிய பக்தர்கள் இலவச தரிசனத்தில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க பல கோரிக்கைகள் வைக்கப்பட்டு
வருகிறது .

இருப்பினும் ஏழை எளிய மக்கள் திருப்பதியில் (Free Darisanam) சாமி தரிசனம் செய்ய இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

டோக்கன்கள் மற்றும் ஆன்லைனில் வழங்கப்பட்ட ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டுமே கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயில் ஏப்ரல் மாத தரிசனத்துக்கான ரூ.300 கட்டண ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை இலவச தரிசன டோக்கன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரத சப்தமி விழாவை முன்னிட்டு 3 நாட்களுக்கு சர்வதர்ஷன் டைம் ஸ்லாட் டோக்கன்கள் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

எது எப்படி இருந்தாலும் திருப்பதியில் பக்தர்களின் வருகைக்கு பஞ்சமே இல்லாமல் தான் இருக்கிறது. கடந்த சில மாதங்களாக திருப்பதி மலைப்பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதாகவும் கூறப்படுகிறது

இதன்காரணமாக பக்தர்கள் மலையேறும்போது தனியாக செல்லக்கூடாது, குழுவாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து பக்தர்களுக்கும் வனத்துறை சார்பில் மூங்கில் கம்பு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர 100 படிக்கட்டுகளுக்கு ஒரு போலீசார் மற்றும் வனத்துறையினர் கயிறு கட்டி தடுப்பு ஏற்படுத்தி முகாமிட்டுள்ளனர்.

என்னதான் சிறுத்தைகள் அச்சுறுத்தல் இருந்தாலும் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை மட்டும் குறையவே இல்லை . நாளுக்கு நாள் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து தான் வருகிறது.

இப்படி இருக்கும் சூழலில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை இலவச தரிசன டோக்கன்கள் ரத்து செய்யப்பட்டுள்ள பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Also Read :https://itamiltv.com/legislative-assembly-budget-session-today-with-governors-speech/

ரத சப்தமி விழாவை முன்னிட்டு 3 நாட்களுக்கு சர்வதர்ஷன் டைம் ஸ்லாட் டோக்கன்கள் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளதால் அடுத்த இலவச டிக்கெட்டுக்காக பகதர்கள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது .


Spread the love
Exit mobile version