தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் முன்பே எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தின் பல இடங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்க போவதாக வானிலை ஆய்வு மையம் லேட்டஸ்ட் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளது.
தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் வானிலை ஆய்வு மையம் மற்றும் தென்மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
- நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தின் பல இடங்களில் இன்று கனமழை பெய்யும்
- இதுவரை அதிகபட்சமாக மாஞ்சோலை பகுதியில் உள்ள நாலுமுக்கு எஸ்டேட்டில் 19 செ.மீ மழை பதிவு
- அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை தொடரும் என எச்சரிக்கை
- குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பால், குளிக்கத் தடை
- பேச்சிப்பாறை அணையில் இருந்து விநாடிக்கு 1000 கன அடி உபரி நீர் திறப்பு; திற்பரப்பு அருவியில் குளிக்கத்தடை
- நெல்லை களக்காடு தலையணை பகுதியில் குளிக்கத் தடை விதிப்பு; அகஸ்தியர் அருவி, சொரிமுத்தையனார் கோயிலுக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.