நடிகர் விஜய் நடித்து வரும் லியோ படம் மிகபெரிய வெற்றி அடைய வேண்டும் என்று இறைவனை வேண்டுகின்றேன் எனக் நடிகர் ரஜினிகாந்த் (rajinikanth) தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரக்கூடிய தலைவர் 170 படப்பிடிப்பு கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்து வந்தது.படப்பிடிப்பை முடித்து ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்புவதற்காக தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.
ப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்..
புவனா ஒரு கேள்விகுறி படத்திற்கு பிறகு தென் மாவட்டத்தில் படப்பிடிப்பிற்காக 1977-ம் ஆண்டு வந்தேன் இங்குள்ள மக்கள் மிகவும் அன்பான மனிதர்கள். எனக்கு ஒரு வருத்தம் என்னவென்றால் எல்லோருடனும் போட்டோ எடுக்க முடியவில்லை என ரஜினிகாந்த் தெரிவித்தார்.
மேலும் விஜய் நடித்த லியோ படம் பற்றி கேட்டதற்கு..
நடிகர் விஜய் நடித்து வரும் லியோ படம் 19-ம் தேதி வெளியாக இருக்கிறது அது மிகபெரிய வெற்றி அடைய வேண்டும் என்று இறைவனை வேண்டுகின்றேன் எனக் கூறினார்.
தலைவர் 170-படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி-யில் முடிந்து தூத்துக்குடி விமான நிலையம் வந்த நடிகர் ரஜனிகாந்த் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த பின்பு 12 மணி விமான மூலம் சென்னை திரும்பினார்.