டி20 உலகக் கோப்பையை வென்று நாடு திரும்பிய இந்திய அணி வீரர்களுக்கு மும்பையில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது .
17 வருடங்களுக்கு பின் டி20 உலகக்கோப்பையை கைப்பற்றியுள்ள இந்திய அணி இன்று தாயகம் திரும்பியது முதற் கட்டமாக பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற இந்திய அணி அப்படியே மும்பைக்கு புறப்பட்டது .
அங்கு கூடி இருந்த ஏராளமான ரசிகர்களுக்கு நடுவே கோப்பையுடன் திருந்த மைதானத்தில் இந்திய வீரர்கள் வலம் வர அவர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
Also Read : போதைப்பொருள் கடத்தலுக்கும் எனக்கும் தொடர்பும் இல்லை – ஜாபர் சாதிக் கொடுத்த பகீர் மனு
மும்பையில் உள்ள மரைன் டிரைவ் பகுதியில் இருந்து மும்பை வான்கடே மைதானம் வரை இந்திய வீரர்களின் இந்த பிரம்மாண்ட ரோடு ஷோ கோலாகலமாக நடைபெற்றது .
இதுகுறித்து வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரலாக வலம் வருகிறது.