Site icon ITamilTv

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை – ராஜேஷ் தாஸுக்கு சிறை தண்டனை உறுதி..!!!

rajesh dass

rajesh dass

Spread the love

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் டி.ஜி.பி.ராஜேஷ் தாஸுக்கு ( rajesh dass ) சிறை தண்டனை உறுதியாகி உள்ளது.

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ்-க்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது .

இந்த தீர்ப்பை ஏற்கமறுத்த ராஜேஷ்தாஸ் இந்த தீர்ப்பை ரத்து செய்ய மேல் முறையீட்டு செய்தார் .

Also Read : கிராம நிர்வாக அதிகாரியை தாக்கிய திமுக கவுன்சிலர் – உடனே கைது செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்..!!!

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கீழமை நீதிமன்றம் விதித்த 3 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டியும், சரணடைவதில் இருந்து விலக்கு கோரியும் முன்னாள் டிஜிபி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது .

2021-ல் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ( rajesh dass ) ராஜேஷ் தாஸ்-க்கு 3 ஆண்டு சிறை மற்றும் 20,500 அபராதம் வழங்கிய தீர்ப்பை சென்னை உயர்நீதி மன்றம் மீண்டும் உறுதி செய்துள்ளது .


Spread the love
Exit mobile version