இசையமைப்பாளர் இளையராஜாவின் அம்பேத்கர்-மோடி ஒப்பீடு குறித்து பெயர் குறிப்பிடாமல் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் விமர்சித்துள்ளார்.
ப்ளூ கிராப் டிஜிட்டல் பவுண்டேசன் நிறுவனம் மூலம் ‘மோடியும் அம்பேத்கரும்’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார். இந்த முன்னுரையில் பிரதமர் மோடியை புகழ்ந்துள்ள இளையராஜா மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசி இருக்கிறார்.
இளையராஜாவின் இந்த புகழாரம் குறித்து சமூக வலைதளங்களில் வைரலாகி கடுமையான விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. பலரும் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இளையராஜாவின் இந்த ஒப்பீடு குறித்து, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், பெயர் குறிப்பிடாமல் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து குறித்து பதிவிட்டுள்ள அவர்;
எனக்கு பிடித்தவர், என் அபிமானத்துக்குரியவர் என்று சொல்லியிருந்தால் ஒன்றும் பிரச்சனையில்லை. சந்தேகத்துக்கு இடமான ஒருவரை நிகரற்ற ஒரு வரலாற்று தலைவனுடன் ஒப்பிட்டதால் தான் எதிர்ப்பு வருகிறது. எஞ்சியிருக்கிற அந்த ஒரே உன்னத விருது இலக்கா? கலைத்துறை சார்பாக நியமிக்கப்படுகிற அந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இலக்கா? அல்லது மாநில ஆளுகை மிது ஏதாவது சொந்த பகையா? இப்படி பலவற்றை தூண்டுகிறது அவரது கூற்று. ஏனெனில் இது உண்மைக்கு புறம்பான பாராட்டு என அவர் பதிவிட்டுள்ளார்.