தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவிற்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ளது, இதில் 3 போட்டிகள் கொண்ட t20 மற்றும் ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ளது. முதலில் t20 போட்டிகள் இன்று ஆரம்பமாகவுள்ளது. முதல் போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடக்கிறது.
இந்தியா அணி கடைசியாக கேரளாவில் விளையாடி 3 மூன்று வருடங்கள் ஆகிறது. மூன்று வருடம் கழித்து கிரிக்கெட் போட்டி நடைபெறுவதால் கேரள விழாக்கோலம் பூண்டுள்ளது. வீரர்கள் தங்கும் ஹோட்டல்லில் கதகளி, மோகினி ஆட்டம் என பல கலை நிகழ்ச்சிகள் நடக்க ஏற்பாடு செய்யபட்டுள்ளது.
இதற்கும் மேலாக கேரள கிரிக்கெட் ரசிகர்கள் சார்பில் இந்திய வீரர்களுக்கு போட்டி நடக்கும் மைதானமான கிரீன்ஃபீல்ட் மைதானத்திற்கு வெளியே கட்அவுட் வைக்கபட்டுள்ளது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, விராட் கோலி , சஞ்சு சாம்சன் ஆகியோரக்கு கட்அவுட் வைத்துள்ளனர். நேற்று போட்டிக்காக கேரளா வந்த இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்ப்பு அளிக்கபட்டது. வழி நெடுகிலும் காத்திருந்த ரசிகர்கள் இந்திய அணி செல்லும் வாகனதிற்கு அருகில் சென்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.