ITamilTv

”மிக்ஜாம் புயல் எதிரொலி..” வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மின்சார வாரியம்!

Spread the love

வடகிழக்கு பருவமழை காரணமாக, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு அரசு மக்களுக்காக துரித நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் வரும் டிச. 3 (நாளை), 4, 5 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் டிசம்பர் 4-ம் தேதி மிக்ஜாம் புயல் தெற்கு ஆந்திரா – வட தமிழகத்தில் சென்னைக்கும் – மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது டிசம்பர் 5-ம் தேதி காலை கரையை கடக்கும் என்றும், இந்த மிக்ஜாம் புயல் தீவிர புயலாக மாற வாய்ப்பு இல்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது தமிழ்நாடு மின்சார வாரியம் பொதுமக்களுக்கு பாதுகாப்புடன் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்..


Spread the love
Exit mobile version