ITamilTv

எஸ்.எஸ்.எல்.சி.யில் சாதனை – காவலர் பிள்ளைகளுக்கு பரிசு

police 03

Spread the love

புதுக்கோட்டை மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்த காவலர்களின் பிள்ளைகளுக்கு மாவட்ட காவல்கண்காணிப்பாளர் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த 10ஆம் தேதி வெளியானது.

இதில், புதுக்கோட்டை மாவட்ட காவல் துறையில் பணிபுரியும் காவல் ஆளிநர்களின் பிள்ளைகள் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் நல்ல மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்தனர்.

திருமயம் காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர் சத்தியபாபாவின் மகள் ஆ. ஜனனிஸ்ரீ 500க்கு 497 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.

அதேபோல் புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் தலைமை காவலர் சுந்தராம்பாளின் மகள் ஊ. அகல்யாவும் 497 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.

இரண்டு மாணவிகளும், மாநிலஅளவில் மூன்றாம் இடமும், மாவட்ட அளவில் முதல் இடமும் பிடித்திருந்தனர். இதே போல, ஆயுதப்படை தலைமை காவலர் சிவபாலனின் மகள் சுவேதா 495 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் இரண்டாம் இடமும் பெற்றார்.
சாதனை படைத்த போலீசாரின் பிள்ளைகள் மூவரையும், புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே IPS, நேரில் வரவழைத்து வாழ்த்து தெரிவித்து பரிசுகளை வழங்கினார்.


Spread the love
Exit mobile version