Site icon ITamilTv

”மனமுடைந்த திருமாவளவன்..”விடியற்காலையில் தந்த விளக்கம்!

Spread the love

வேங்கை வயல் விவகாரத்தில் திமுகவைச் சேர்ந்த உறுப்பினர்களைப் போலப் பேசுகிறீர்கள் என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்குச் சீமான் கொடுத்து எழுந்த சம்பவம் பெறும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

எப்பொழுதும் செய்தியாளர் சந்திப்பில், எப்படிப்பட்ட சிக்கல் ஆன கேள்விகளுக்குச் சரணம் அற்ற நிதானத்துடன் எதிர்கொள்ளும் திருமாவளவன் நேற்றைய தினம் பதில் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்த நிலையில் இந்த சம்பவம் திருமாவளவனையும் அவருடன் வந்திருந்த விசிக சட்டமன்ற உறுப்பினர்களையும் காயப்படுத்தியுள்ளது.

இதனால் செய்தியாளர் சந்திப்பிலிருந்து திருமாவளவன் பாதியிலேயே விடை பெற்றுச் சென்றார். இதனைத் தொடர்ந்து ஷாநவாஸ் எஸ் எஸ் பாலாஜி போன்றவர்கள் பத்திரிகையாளர்களிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டன.
இந்த சம்பவம் குறித்து தனது twitter பக்கத்தில் திருமாவளவன் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

வேங்கைவயல் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை விட, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் அதன் தலைமை மீதான #நம்பகத்தனமையைச் சிதைக்க வேண்டுமென்பதே அந்த கேள்வியில் இழையோடும் உள்நோக்கமென புலப்படுகிறது.

பாதிக்கப்பட்டோரின் பக்கம் நின்று, கூட்டணி கணக்குகளை முன்னிறுத்தாமல்,
நேர்மைத் திறத்தோடு போராடிக் கொண்டிருக்கிற ஒரு இயக்கத்தை மற்றும் அதன் தலைமையை, ஒரு குதர்க்கமான கேள்வியின் மூலம் சிறுமைப்படுத்தும் நோக்கமே அதில் வெளிப்படுகிறது.

அந்தக் கேள்வியின் அற்பமான உள்ளீடாக இருக்கலாம்.ஆனால், அந்தக் கேள்வி பாதிக்கப்ட்ட வேங்கைவயல் மக்களின் மீதான கரிசனம் இல்லை என்பது மட்டும்தான்.இதில் உணர வேண்டிய உண்மை நிலையாகும்.


Spread the love
Exit mobile version