Site icon ITamilTv

பாரதியாரின் கனவு தான் ”திராவிட மாடல் ஆட்சி”அதை தான் முதல்வர் பண்ணுறாரு -கனிமொழி எம்.பி!

Spread the love

தீக்குளித்த கவிஞரும், சுதந்திரப் போராட்ட வீரருமான சுப்பிரமணிய பாரதியின் நினைவு நாளான செப்டம்பர் 11ஆம் தேதியை “மகாகவி” தினமாக தமிழக அரசு கொண்டாடப்பட்டது.

தேசபக்தியை பற்றவைத்து, தமிழ் இலக்கியத்தில் அழியாத முத்திரையை பதித்த கவிஞரின் 100வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அடுத்த ஓராண்டுக்கு பாரதியார் நினைவு இல்லத்தில் வாராந்திர நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என மாநில முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் ,தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் மணி மண்டபத்தில் பாரதி முற்போக்கு வாலிபர் சங்கம் சார்பில் மகாகவி பாரதி 60 ஆண்டு வைரவிழா நடந்தது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு கலை, இலக்கிய பெருமன்ற பொதுச் செயலாளர் டாக்டர் அறம் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக கனிமொழி எம்.பி, சமூக நலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்து கொண்டனர்.

அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும். சாதி,மத வேறுபாடுகள் இருக்க கூடாது என்று குரலை உயர்த்தி பாடியவர் மகாகவி பாரதி. பல்வேறு மூடநம்பிக்கைகளை, சமூகத்தில் இருந்த அழுக்குகளை துடைத்தெறிய வேண்டும் என்பதற்காக தனது கவிதை, எழுத்துக்களை தொடந்து மக்களுக்காக அர்ப்பணித்த கவிஞர் தான் பாரதி.

எல்லோருக்கும் நியாயம் கிடைக்க வேண்டும், சமூகநீதி கிடைக்க வேண்டும், ஆணும் பெண்ணும் சமம் என்ற மகாகவி பாரதியரின் கனவினை தான் இன்று திராவிட மாடல் ஆட்சியாக முதல்-அமைச்சர் மு.கஸ்டாலின் தலைமையிலான அரசு நிறைவேற்றி கொண்டு இருக்கிறது.

திமுக ஆட்சியில் தமிழ் எழுத்தாளர்கள், மண்ணுக்காக பாடுபட்டவர்களுக்கு அங்கீகாரமும், மரியாதையும் வழங்கப்பட்டு வருகிறது. திமுக ஆட்சி என்பது தமிழுக்காக, தமிழருக்கான ஆட்சி. அந்த ஆட்சி நடைபெற்று கொண்டு இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

இதனை தொடர்ந்து ,இந்த வேறுபாட்டையும் மாறுபாட்டையும் களைய தமிழகம் முழுமைக்குமான சமச்சீராக பாரதியாரின் எண்ணங்களை திராவிட மாடல் அமைப்பில் திமுக செயல் படுத்தி வருவதாக கனிமொழி தெரிவித்துள்ளார்.


Spread the love
Exit mobile version