வீட்டில் தனியாகத் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் கூட்டு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பகுதி ஊத்துக்குளி.இங்குத் தனியார் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கணவன் மாற்றட்டும் மனைவி வேலை செய்து வந்துள்ளனர். இந்த நிலையில்,நேற்று முன்தினம் இரவு கணவர் மட்டும் வேலைக்கு சென்றுவிட்டார். அப்போது மனைவி தனியே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அதே நிறுவனத்தில் வேலைபார்க்கும் வடமாநில வாலிபர்கள் 3 பேர் வீட்டிற்குள் புகுந்து தனியே இருந்த அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அலறி சத்தம் போட்டார். இதையடுத்து அவர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு தொழிற்சாலையில் இருந்து வந்த தொழிலாளர்கள் அந்தப் பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது குறித்துப் பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து ,காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.அதில் ஈடுபட்டதாக வடமாநிலத்தைச் சேர்ந்த இப்ராகிம் அலி , அமாருள் இஸ்லாம் , அனீப் அலி ஆகிய மூவரை காவல்துறை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கூட்டுப் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது