ITamilTv

பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு! அமைச்சராக உதயநிதி செயல்பாடுகள் என்னென்ன?

Spread the love

தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்று இன்றுடன் 1 ஆண்டு நிறைவடைகிறது. இந்த ஓராண்டு காலத்தில் அவரின் செயல்பாடுகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் பேரனும், தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சராக தனது சிறப்பான பணியை செய்து வரும் மு.க.ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் 2019 ஆம் ஆண்டு வரை திரைத்துறையில் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் மட்டுமே மக்களால் அறியப்பட்டு வந்தார்.

கலைஞர் கருணாநிதி முதல் பெரியப்பா வரை குடும்பத்தில் பலரும் அரசியலில் மாபெரும் ஆளுமையாக திகழ்ந்து வருகினறனர்.இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞர் அணி செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி மறைவுக்குப் பின் தீவிர அரசியலில் ஈடுபட்ட உதயநிதி. நாடாளுமன்ற தேர்தலில் முன்னணி திமுக மூத்த தலைவர்கள் செய்த பிரச்சாரத்தை விட உதயநிதி செய்த செங்கல் பிரச்சாரம் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற காரணமாக அமைந்தது.

இதனை தொடர்ந்து திமுகவின் இளைஞரணி செயலாளராக சிறப்பாக பணியாற்றி வந்த உதயநிதி, கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் சேப்பாக்கம் – திருவல்லிகேணி தொகுதியில் போட்டியிட்டு அபார வெற்றி பெற்றார்.

அந்த தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் முதல் முறையாக பதவியேற்றார். அன்று பதவியேற்ற அமைச்சரவையில் உதயநிதி பெயர் இடம் பெறாதது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையில் திமுக ஆட்சிக்கு வந்த பின் ,உதயநிதிக்கு திமுகவின் முன்னணி தலைவர்களை விட முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.குறிப்பாக உதயநிதி புகைப்படம் இல்லாமல் திமுகவின் எந்த நிகழ்ச்சிகளும் இல்லை என்னும் அளவுக்கு அவரது அரசியல் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது.

இப்படிப்பட்ட சூழலில் தொடர்ந்து படங்களில் நடிக்க வாய்ப்பு உள்ள என்ற கேள்விகள் உலா வந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினும் படங்களில் நடித்துக் கொண்டே தான் இன்னும் அரசியல் பாடம் கற்றுக் கொண்டு இருக்கும் நபர் தான் என்பதை வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டார்.

இந்நிலையில் தான் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி தமிழ்நாட்டை விளையாட்டு தலைநகராக மாற்றுவேன் என்றும், விமர்சனங்களுக்கு செயல்பாடுகள் மூலம் பதிலடி கொடுப்பேன் என்று தெரிவித்து இருந்தார்.

அதேசமயம் எம்.எல்.ஏ.வாக இருந்த நேரத்தில் சினிமாவில் தீவிரமாக நடித்து வந்த உதயநிதி, அமைச்சரான பிறகு மாமன்னன் படத்துடன் சினிமாவில் இருந்து விலகினார்.

இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்த உதயநிதி நீட் தேர்வு விலக்கு குறித்து வலியுறுத்தியதாக தெரிவித்தார். பின்னர் ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்ற தொடரில் பேசிய உதயநிதி, ‘வடக்கே இருந்து வந்து இங்கு யாரும் வென்ற வரலாறு கிடையாது’ என பேசி அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார்.

இந்த சூழலில் தான் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திமுக ஃபைல்ஸ் என்ற பெயரில் திமுக முக்கிய தலைவர்களின் ஊழல் குறித்து ஆவண படத்தை வெளியிட்டு 1.31 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை சேர்த்துள்ளதாக பொது வெளியில் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.அதில் உதயநிதி பெயர் இடம் பெற்றிருந்தது.இதனால் அண்ணாமலை மீது ரூ. 50 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தான் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில் காமராஜர் அரங்கத்தில் சனாதன ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டது. அதில் உதயநிதி பேசிய
சந்தானத்திற்கு எதிரான கருத்துகள் இந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

மேலும் இதற்க்கு இந்தியா முழுவதிலும் உள்ள பாஜக தலைவர்கள் உதயநிதியின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். அந்த வகையில் உத்திரபிரசேத மாநிலத்தை சேர்ந்த சாமியார் ஒருவர் உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி விலை நிர்ணயம் செய்தார் அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இப்படி பல சர்ச்சைகளுக்கு நடுவே தன்னுடைய ஆளுமையை அரசியல் களத்தில் வளர்த்து வருகிறார். குறிப்பாக நீட் விலக்கு கோரி கையெழுத்து இயக்கம், நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்காததது பற்றி செங்கல் காட்டிய அவர்,

நீட் தகுதி மதிப்பெண் பூஜ்ஜியமாக நிர்ணயித்தபோது முட்டையை காட்டி விமர்சனத்திற்கு உள்ளானாலும் மக்கள் மனதில் தனக்கென தனியிடம் பிடித்து அடுத்தததுதுணை முதல்வர், திமுகவின் எதிர்காலம் என்றெல்லாம் அவரது ஆதரவாளர்கள் கூறிவரும் நிலையில் இதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்று இன்றுடன் 1 ஆண்டு நிறைவு செய்த அமைச்சருக்கு தலைவர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.


Spread the love
Exit mobile version