Site icon ITamilTv

இது பிரதமர் மோடியின் தேர்தல்.. மக்கள் தெளிவா இருக்காங்க.. – அண்ணாமலை!

pm modi annamalai bjp lokshabha election 2024 Varanasi

pm modi annamalai bjp lokshabha election 2024 Varanasi

Spread the love

வாராணசி தொகுதியில் பிரதமர் மோடி அதிக வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறுவார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 18 வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19 தேதி தொடங்கி ஜூன் இரண்டாம் தேதி வரை நடைபெற உள்ளது. ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அதன்படி ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலில் தற்பொழுது 4 கட்ட தேர்தல் நிறைவடைந்து உள்ளது,

அந்த வகையில், உத்தர பிரதேசம் வாராணசி தொகுதியில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் மும்பையில் தொழில்முனைவோர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது:

இதையும் படிங்க: ”மீனவர் நலன் காக்க துணை நிற்கும் மத்திய அரசு..” ஆனா திமுக.. – லிஸ்ட் போட்ட அண்ணாமலை!

இதற்கு முன்பும் நாம் பிரதமரின் தொகுதிகளை பார்த்திருக்கிறோம். வாராணசி நகரம் முற்றிலும் மாறிவிட்டது என அப்பகுதி மக்கள் தற்போது பெருமிதத்துடன் கூற முடியும்.

பிரதமர் மோடி தனது தொகுதியில் செய்ய வேண்டிய பணிகளை உண்மையாக செய்திருக்கிறார். பிரதமரால் தனது தொகுதிக்கு என்ன செய்ய முடியும் என்பதை அவர் காட்டியுள்ளார்.

இந்த முறை வாராணசி தொகுதியில் அவர் அதிக வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறுவார். வாராணசி தொகுதியில் அவர் செய்ததுபோல் மற்ற எம்.பி.க்களும் தங்கள் தொகுதியில் செய்ய வேண்டும் என அவர் உறுதிப்பட தெரிவிக்கிறார்.

பெரும்பாலான இடங்களில் பாஜக வெற்றி பெறுவதற்கான சூழல் உள்ளது. இது பிரதமர் மோடியின் தேர்தல் என்பதில் மக்கள் தெளிவாக உள்ளதாக அண்ணாமலை கூறினார்.


Spread the love
Exit mobile version