Site icon ITamilTv

” Ex. IPS அதிகப்பிரசங்கித்தனமா பேசி..” அண்ணாமலையை வறுத்தெடுத்த எஸ்.வி.சேகர்!

Spread the love

தமிழக பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலையை மறைமுகமாக சாடும் வகையில், தனது ட்விட்டர் பக்கத்தில் அடிக்கடி நடிகரும், தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகியுமான எஸ்.வி சேகர்(sv sekar) தொடர்ந்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

மத்திய குழு பாராட்டு:

மிக்ஜாம் புயல் பாதிப்பை மதிப்பிட்டு, மத்திய அரசு நிவாரணத்துக்கு பரிந்துரைக்க, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில் கடத்த (டிச். 12) ஆம் தேதி மத்திய குழுவினர், சென்னை தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் உடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய குழு வெள்ள பாதிப்பை எதிர் கொண்டது குறித்து தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து இருந்தது.

மத்திய குழு பாராட்டில் உடன்பாடு இல்லை:

இந்த நிலையில் வெள்ள பாதிப்பை எதிர் கொண்டது குறித்து தமிழக அரசுக்கு மத்திய குழு பாராட்டு தெரிவித்திருப்பது சம்பிரதாயமானது என்றும், அதில் தனக்கு உடன்பாடு இல்லை என் றும் தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்தார்.

சென்னைக்கு சனிக்கிழமை வந்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை விமான நிலையத்தில் வரவேற்ற அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியது:

மத்திய அரசு அதிகாரிகள், மாநில அரசு அதிகாரிகளை ஒருபோ தும் குற்றம்சாட்ட மாட்டார்கள். அதேபோல மாநில முதல்வர்க ளையும் குறைகூற மாட்டார்கள். புயல் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட வந்த மத்திய குழு சம்பிரதாயத்துக்கு தமிழக அரசை பாராட்டியது. இதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றார்.

இது குறித்து விமர்சிக்கும் வகையில், எஸ்.வி சேகர்(sv sekar) தனது ட்விட்டர் பதிவில்,

மத்திய தலைமை சந்தோஷப்பட்டு தமிழக தலைவரா அண்ணாமலையை போட்டது கூட இங்க எவ்வளவோ பேருக்கு உடன்பாடு இல்லை. நாங்க பொறுத்துக்கலையா. அதிகப்பிரசங்கித்தனமா பேசி நம்ம மேலிடத்தையே அசிங்க்கப்பட வைக்கக்கூடாது. புரியுதா Ex. IPS.என்று குறிப்பிட்டுள்ளார்.


Spread the love
Exit mobile version