ITamilTv

மிட்டாய் கடைக்குள் புகுந்த கார்…. உயிர்தப்பிய தாய், மகன் – திக்திக் சிசிடிவி காட்சி

Spread the love

கோவில்பட்டியில் கட்டுப்பாட்டை இழந்து மிட்டாய் கடைக்குள் கார் புகுந்த சம்பவத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி இருக்கிறது.
இந்த விபத்தில், நல்வாய்ப்பாக கடையில் இருந்த தாய் மகன் மற்றும் கடை ஊழியர்கள் உயிர் தப்பி உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜு நகர் பகுதியைச் சேர்ந்த 19 வயது ரமேஷ் என்பவர் தனது தாயாருடன், மாதாங்கோவில் சாலையில் காரில் சென்றார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் சென்ற 2 இருசக்கரவாகனங்களின் மீது மோதியதில் அவர்கள் கீழே விழுந்து காயம் அடைந்தனர்.

தொடர்ந்து இயங்கிய கார் அருகில் இருந்த சமுத்திரபாண்டி என்பவருக்கு சொந்தமனா மிட்டாய் கடைக்குள் மோதி புகுந்தது. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பானது.

இதையும் படிங்க: ‘காஷ்மீரில் திடீரென உள்வாங்கிய பூமி..’ ஒரு நொடியில் நிகழ்ந்த பயங்கர காட்சி!

நல்வாய்ப்பாக பைக்கில் சென்றவர்கள், காரில் இருந்த தாய்மகன், கடையில் இருந்த ஊழியர்கள் யாருக்கும் உயிர்சேதம் ஏற்படவில்லை.
தகவலின் பேரில் அங்கு வந்த போக்குவரத்து போலீசாரும், மேற்கு காவல்நிலைய அதிகாரிகளும், காரை ஓட்டி வந்த ரமேஷிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இரண்டு மணி நேரத்திற்கு பின்னர் சம்பவ இடத்தில் இருந்து காரை அகற்றினார். விபத்து காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு நிலவியது.
கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் கார் புகுந்த விபத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Spread the love
Exit mobile version