ITamilTv

ஒமிக்ரான் வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

omicron allotted 150 beds at rajiv gandhi hospital chennai

Spread the love

ஒமிக்ரான் வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 150 படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உலகின் 23 நாடுகளில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும் இது மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் உருமாற்றம் அடைந்த புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பைத் தடுக்க பல்வேறு உலக நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு பதிவான நாடுகளுடனான போக்குவரத்து தடை செய்யப்பட்டு வரும் அதேவேளையில் வெளிநாட்டு பயணிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

omicron-allotted-150-beds-at-rajiv-gandhi-hospital-chennai
omicron allotted 150 beds at rajiv gandhi hospital chennai

இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 150 படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் ஒமிக்ரான் பாதிப்புகளுக்காக 15 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.


Spread the love
Exit mobile version