Site icon ITamilTv

கழுத்து, கை, கால்கள் முழுவதும் .. ஜெயக்குமாரின் உடலை மீட்டபோது எடுத்த புகைப்படங்கள் வெளியீடு!

tirunelveli congress leader Jayakumar Thanasingh

tirunelveli congress leader Jayakumar Thanasingh

Spread the love

நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் சடலத்தில், கழுத்து, கை மற்றும் கால்களில் இரும்புக் கம்பிகள் சுற்றப்பட்டுள்ள புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் கே.பி.கே. ஜெயக்குமார் தன்சிங். இந்நிலையில் கடந்த 2ம் தேதி இரவு 7.30 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்ற ஜெயக்குமார் 2 நாட்கள் ஆகியும் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த மகன் காவல் நிலையத்தில் தந்தையை கண்டு பிடித்து தருமாறு புகார் மனு அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் ஜெயக்குமார் தன்சிங்கின் உடல் திசையன்விளை அருகே தோட்ட வீட்டில் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ”சொந்த தோட்டத்தில் எரித்து படுகொலை செய்யப்பட்ட ஜெயக்குமார்..” -ராமதாஸ் பகீர்!

இந்த சம்பவம் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், எரிந்த நிலையில் இருந்த ஜெயக்குமாரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.’

இதில், ஜெயகுமாரின் முகம், கழுத்து, கை மற்றும் கால்களில் இரும்பு கம்பிகள் சுற்றப்பட்டுள்ளன.இதனால் வேறொரு இடத்தில் கை, கால்கள் கட்டப்பட்டு ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஜெயக்குமார் மகனின் ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்காக அனுப்பியுள்ள நிலையில், இந்த ஆய்வு முடிவுகள் வந்த பின் விசாரணையை தீவிரப்படுத்தவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


Spread the love
Exit mobile version